Home தலைப்புச் செய்தி தமிழ் மக்கள் வரலாறு – ஆனந்தரங்கன் நாட்குறிப்புகள் – PDF வடிவில் !

தமிழ் மக்கள் வரலாறு – ஆனந்தரங்கன் நாட்குறிப்புகள் – PDF வடிவில் !

தமிழ் மக்கள் வரலாறு – ஆனந்தரங்கன் நாட்குறிப்புகள்  – PDF வடிவில் !

18-ம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன் பிள்ளையின் நாட்குறிப்புகள் ( 06.09.1736 முதல் 12.01.1761 வரை ) PDF வடிவில் பனிரெண்டு நூல்கள் உங்கள் கையில்.

நண்பர்களே…

பொ.வேல்சாமி

ம் நாட்டில் படிப்பறிவுள்ளவர்களில் பலர் “வரலாறு” என்பதை சரிவர புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கின்றனர். மக்களை ஏமாற்றும் வஞ்சகர்கள் இந்த இருள்பகுதியை செம்மையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் நாட்டு மக்கள் ஏமாளிகளாக ஆகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட செய்திகளை மக்கள் எவ்விதம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விவாதம் நம்மிடையே உருவாக வேண்டும். இதற்கு துணை செய்யும் விதத்திலான பல நூல்கள் தமிழில் உள்ளன. இவற்றை படிக்கும் கல்வியாளர்கள் இச்செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழக வரலாற்றை அறிந்து கொள்வதற்கு கி.மு.500 தொடக்கம் பதிவாகியுள்ள பிராமி எழுத்துக்களில் தொடங்கி சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், வெளிநாட்டு அறிஞர்களின் பயணக் குறிப்புகள் போன்றவற்றைத் தொடர்ந்து கல்வெட்டுக்கள் செப்புப் பட்டையங்கள் பிற்காலங்களில் தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பிய பாதிரிமார்கள் பயணிகளின் குறிப்புகள் போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன.

ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் எழுதப்பட்ட “புளுடார்க்” போன்ற வரலாற்றுக் குறிப்புகள் நம்மிடையே இல்லை. அதே நேரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன்பிள்ளையின் தினசரி நாட்குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளை (1760-1766), இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு (1778 -1792 ) போன்றவர்களின் நாட்குறிப்புகளும் நமக்கு கிடைத்துள்ளன. இதில் ஆனந்தரங்கன்பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து “வானம் வசப்படும்” என்ற மிக அருமையான நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

பழங்காலத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் எந்தெந்த வகையான பிரச்சனைகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் பெற்றார்கள் என்பதை இந்த நாட்குறிப்புகள் நமக்கு திரைப்படக் காட்சிகளைப் போன்று காட்டுகின்றன. நமக்கு தமிழ்நாட்டு அறிவை சிறப்பாகக் கொடுக்கும் இந்த நாட்குறிப்பை நீங்கள் எல்லாம் பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அதற்கான இணையதள இணைப்பை இவ்விடம் கொடுத்துள்ளேன். 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பேச்சுவழக்குத் தமிழ் உரைநடையாக இருப்பதால் படிப்பதற்கு கொஞ்சம் பொறுமையுடன் முயன்று படிக்க வேண்டும்.

குறிப்பு : இந்தத் தொகுதிகளில் பதினொன்று மட்டும் கிடைக்கவில்லை. கையில் இதன் PDF வைத்திருக்கும் நண்பர்கள் இணைப்பைக் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஒன்று

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி இரண்டு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி மூன்று

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி நான்கு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஐந்து

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஆறு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஏழு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி எட்டு பாகம் – 1

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி எட்டு பாகம் – 2

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு : தொகுதி ஒன்பது

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு : தொகுதி பத்து

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு : தொகுதி பன்னிரண்டு

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

4 COMMENTS

    • பிரச்சினை சரி செய்யப்பட்டது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி !

Leave a Reply to வினவு Cancel reply

Please enter your comment!
Please enter your name here