வேதாரண்யத்தில் வெட்டரிவாள், சுத்தியலுடன் அம்பேத்கர் சிலையை ஆதிக்க சாதிவெறி கும்பல் சிதைத்ததைக் கண்டித்து குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் குடந்தை சங்கரா கலைக்கல்லூரி மாணவர்களும் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தினர்.

வேதாரண்யம் சிலை உடைப்பின்போது வேடிக்கைப் பார்த்த போலீசார், சாதிய வன்மத்தோடு திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டித்து ஜனநாயக சக்திகள் குரல் கொடுப்பதைக்கூட சகிக்க முடியாமல் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றனர். தமிழகம் சாதிவெறியர்களின் கூடாரமாவதை அனுமதிக்க மாட்டோம் என்ற சூளுரையோடு தடையை மீறி தன்னெழுச்சியான போராட்டங்கள் பலவும் நடைபெற்று வருகின்றன.

கடலூர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, மதுரை சட்டக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் கண்டன போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மற்றும் சங்கரா கலைக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஆக-27, 28 ஆகிய தேதிகளில் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நுழைவாயில் அருகே திரண்ட மாணவர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்த பொறுக்கிகளை கைது செய்ய கோரியும், சாதிவெறிக்கும்பலுக்குத் துணைபோகும் போலீசாரைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இசுலாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி கடப்பாறையும் கையுமாக சென்று பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய சங்பரிவார் கும்பலுக்கும், வேதாரண்யத்தில் சுத்தியலோடு சென்று அம்பேத்கர் சிலையை சிதைத்ததோடு, அதை விசிலடித்து ரசித்து கொண்டாடிய சாதிவெறிக்கும்பலுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்ன?

 வினவு செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க