இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்

இந்தியப் பொருளாதாரம், காஷ்மீர் மற்றும் தொழிலாளர் வாழ்வு ஆகியவற்றின் இன்றைய நிலையை பாடலில் விவரிக்கின்றனர் ம.க.இ.க மையக் கலைக்குழுவினர். பாருங்கள்.. பகிருங்கள்..

சிய சோசலிச புரட்சியின் 102-ம் ஆண்டை ஒட்டி திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மொத்த இந்தியப் பொருளாதாரம், காஷ்மீர் மற்றும் தொழிலாளர் வாழ்வு ஆகியவற்றின் இன்றைய நிலையை பாடலில் விவரிக்கின்றனர் ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள் கோவன் மற்றும் லதா.

“மூனு ரூபா பார்லே ஜி வாங்க முடியல …
முப்பது ரூபா பனியன் ஜட்டி போணி ஆகல …”
– பொருளாதார நெருக்கடியை அம்பலப்படுத்தும் கோவனின் பாடல்.

“எழில்மிகு காஷ்மீரிலே என்ன நடக்குது தெரியல …
மண்ணின் சொர்க்கமே இருண்டு கெடக்கு .. மர்மம் விலகல …”
– காஷ்மீர் மக்கள் வாழ்வின் சோகத்தை பாடலாக வெளிப்படுத்துகிறார் தோழர் லதா…

“இரும்பு குழம்பாகி பாய்லரிலே கொதித்திடும் ..
கை உரையும் தாண்டி சூடு விரலெல்லாம் வெந்திடும் …”
தொழிலாளர்களின் வேலைநிலை அவலத்தை பாடலால் விவரிக்கிறார் தோழர் கோவன்..

பாருங்கள் ! பகிருங்கள் !

3 மறுமொழிகள்

  1. இந்தியா பொருளாதார வீழ்ச்சி கம்யூனிஸ்ட்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும், இதற்காக தானே பொய்களை பரப்பி பல போராட்டங்களை தூண்டி ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளை மூடி தொழிலாளிகளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து… நாட்டின் வளர்ச்சியை குலைத்தார்கள்.

    ஆனால் கம்யூனிஸ்ட்கள் இந்த வெற்றி தற்காலிகமானது நிச்சயம் எங்கள் இந்த பின்னடைவை தாண்டி வளரும். கம்யூனிஸ்ட்கள் எவ்வுளவு தான் எங்கள் தேச மக்களின் முதுகில் குத்தினாலும் நாங்கள் வளர்வோம்.

  2. ஐயயோ இவர்களுக்கு தான் காஷ்மீர் மக்கள் மீது எவ்வுளவு அக்கறை…. தீவிரவாதிகள் பிள்ளைகளை பள்ளி கூடத்திற்கு அனுப்பினால் கொன்று விடுவோம் என்று மிரட்டுவது இந்த அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் காதுகளில் கேட்காது. கடையடைப்பு அறிவித்த பிறகும் ஏண்டா கடையை திறந்தாய் என்று சொல்லி அப்பாவி கடைக்காரரை கொன்ற இவர்களின் பாக்கிஸ்தான் கூட்டாளிகளின் செயல் கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரையில் புரட்சி போராட்டம்.

    நல்லவேளை அயோக்கிய கம்யூனிஸ்ட்களையும் மீறி நாட்டில் ஏதோ ஒரு சில பத்திரிகைகள் இருப்பதால் உண்மை வெளியுலகத்திற்கு தெரிகிறது இல்லையென்றால் இந்த அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் எல்லாவற்றையும் மூடி மறைத்து என்னமோ இந்தியா அரசு தான் காஷ்மீரிகளை கொடுமைப்படுத்துகிறது என்றளவுக்கு பொய்களை பரப்பி இருப்பவர்கள் இந்த தேச துரோகிகள்.

    • அய்யா மணிகண்டன் அவர்களே உங்களைத்தான் சாணக்யா பாண்டே கம்பெனியில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் உழைக்கத்தேவையே இல்லையாம் தாங்கள் கூறும் கட்டுக்கதைகளை அப்படியே வந்து சாணக்கியா யூடியூப் சேனலில் வந்து அவிழ்த்துவிட்டாலே போதுமாம் என்ன ரெடியாயிட்டீங்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க