க்கன் சக்கிலியனுக்கு 1935 -ல், பிரிட்டிஷ் அரசு வழங்கிய 2.8 ஏக்கர் நிலத்திற்கு, வரிகட்டச் சொல்லி நோட்டீஸ் ஒன்று வந்து சேர்ந்திருந்தது. நோட்டீசைப் படித்த, பேரன் பழனிசாமிக்கு ‌அதிர்ச்சியாக இருந்தது. இந்த நோட்டீஸ் வரும்வரை பழனிசாமிக்கு இப்படி ஒரு நிலமிருப்பதே தெரியாது.

வரிகட்டுவதற்கு நிலம் தொடர்பான ஆவணங்களை தேடியெடுக்க ஆரம்பித்த பழனிசாமிக்கு போதும்.. போதும் என்றாகிவிட்டது. இறுதியில் பல்வேறு தோழமைகளின் உதவியுடன் ஆவணங்களை தேடி சேகரித்தார்.

மேட்டுப்பாளையம் நகர எல்லைக்குள் இருக்கும் அந்த நிலம் சுமார் 2.8 ஏக்கர் பரப்புடையது. அதன் விலைமதிப்பு சுமார் 5 கோடிக்கு மேல் தேறும்.

இந்த நிலவிசயத்தை அறிந்த புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், பழனிசாமியை லாட்ஜ்க்கு அழைத்து, ஒரு பெட்டியை திறந்த காட்டி- “இந்த பணக்கட்டுகள் முழுவதையும் எடுத்துக்கொள்‌. கையெழுத்துப்போட்டுக்கொடு” எனக் கேட்டனர்.

அவர் இறங்கிவரவில்லை; இன்னொரு பெட்டியையும் எடுத்துக் கொடுத்தனர், அப்போதும் இறங்கிவரவில்லை. எதற்கும் அசையாத போது, மிரட்டத் தொடங்கினார்கள். பழனிசாமி சிரித்துக்கொண்டே படியிறங்கி வந்துவிட்டார்.

ஆவணங்கள் முழுமையாக சேகரித்த பழனிசாமி தலித் என்ற காரணத்திற்காக வழங்கப்பட்ட அந்த நிலம், தலித் மக்களுக்கே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் தலித் மக்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு குழுவாகச் சென்றார்.

வீடோ, நிலமோ இல்லாதவர்களாகப் பார்த்துப் பார்த்து தேர்வுசெய்து 105 பேர்களை பட்டியலிட்டார். ஒரு விடுமுறைநாளில் பட்டியலில் இருப்பவர்களையெல்லாம் அழைத்துவந்து ஒரு குடும்பத்திற்கு (1.1/2 ) ஒன்றரை செண்ட் ‌வீதம் 2.8 ஏக்கர் நிலத்தையும் பிரித்துக் கொடுத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் அவர்கள் தோழர் பழனிசாமி மற்றும் அவரது துணைவியார் வெண்ணிலா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிதார்.

அந்த நிலத்திலிருந்து தனக்கென ஒரு செண்டைகூட எடுத்துக்கொள்ளவில்லை சிலர் வற்புறுத்தியபோது இப்போது நான் குடியிருக்கும் 1 1/4 செண்டே போதுமானது நிலமில்லாதவர்களுக்குத்தான் நிலம் என்று புன்னகையோடு கடந்துபோனார்.

எனக்கும் ஒரு செண்ட் நிலம் வேண்டும் ,நான் பழனிச்சாமியின் பேசவேண்டும் என்று அவரது சகோதரி என்னிடம் கேட்டார், பழனிசாமியிடம் பேசினேன். ஒரு விதவை என்ற முறையில் உதவலாம் என்றேன்.

“நான் குடியிருக்கும் இடத்தில் ஒரு பங்கான 1.1/4 செண்ட் சகோதரி பெயரில்தான் இருக்கிறது அதுபோதுமானது. சகோதரி என்பதற்காக, நிலத்தை கொடுக்கமுடியாது “நிலம் இல்லாதவர்களுக்கு தான் இடம் என்ற கொள்கையிலிருந்து மாற முடியாது’’” என்று சொல்லிவிட்டார்.

படிக்க:
மகிழ்ச்சியின் தருணங்கள் !!
♦ தடுமாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களா கம்யூனிஸ்டுகள் ?

இது, முரட்டுக் கொள்கை. கொள்கையில் நெகிழ்வுத் தன்மை வேண்டும் என வாதாடினேன் ஆனால் தோற்றுப்போனேன். நிலம் கொடுத்ததோடு நின்றுவிடவில்லை குடிசைகூடபோடமுடியாத நிலையில் பலர் அந்த பட்டியலில் இருந்தனர் அவர்களுக்கு குடிசைபோட சிறு சிறு உதவிகளையும் சேர்த்தே செய்தார்.

அதன் பிறகு நிலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. நிலத்தை அரசே எடுக்கவைத்தார் அந்த நிலத்தில் அதே 105 தலித் குடும்பங்களுக்கு பட்டாவும் பெற்றுக் கொடுத்தார் யு.ஆர்.பழனிசாமி!

யு.ஆர். பழனிசாமி தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் நகர செயலாளராக பொறுப்பு வகித்துவருகிறார்

நன்றி : Vvellingiri Vvgiri
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க