மோடி ஆட்சியில் அசுர வேகமெடுக்கும் வளர்ச்சி… இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் !

2014 -க்குப் பிறகு இந்திய வங்கிகளில் அதிகரிக்கும் மோசடிகள்…

1. 2014 -க்குப் பிறகு, அரசு நடத்தும் வங்கிகளில் மோசடிகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. 2017-18 உடன் ஒப்பிடும்போது, 2018-19ல் மோசடிகள் 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.

2. பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடியின் மதிப்பு 2013-14ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில் 10,171 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டில் இது 19,455 கோடி ரூபாயாக அதிகரித்தது.

3. 2016-17ல் 23,944 கோடி ரூபாயை எட்டியது. அதன் பிறகு, மோசடிகளில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. 2017-18ஆம் ஆண்டில் 41,168 கோடியாகவும், 2018-19ல் 71,543 கோடியாகவும் இந்தத் தொகை உயர்ந்தது.

4. 2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார். அப்படியென்றால் மோசடி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

5. 2018-19ல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் 22,000 -க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் 25,417 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக தெரியவந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி (10,822 கோடி ரூபாய்), பாங்க் ஆப் பரோடா (8,273 கோடி ரூபாய்) ஆகியவை மோசடியில் அடுத்த இரண்டு இடங்களை பிடித்தன. நாட்டின் இந்த மூன்று மிகப்பெரிய அரசு வங்கிகளின் நிலைமை அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

படிக்க:
இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்
இந்திய நாடு, அடி(மை) மாடு !

6. மோசடிகளில் 55 சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்றுள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் 90 சதவீதம் பொதுத்துறை வங்கிகளிடமிருந்தே சென்றுள்ளது.

7. பொருளாதார குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் முதலிடத்தை பிடித்துள்ளது ஜெய்ப்பூர். அதையடுத்த இடங்களை லக்னோ, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கான்பூர், மும்பை, புனே, நாக்பூர் மற்றும் காசியாபாத் ஆகிய இடங்கள் பிடித்துள்ளன.

8. முத்ரா கடன்கள் தொடர்பாக வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. பல வங்கிகள் முத்ரா திட்டத்தின் கீழ் கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கவில்லை என்ற தகவல்களுக்குப் பிறகு, இதுபோன்ற கடன்களைக் கொடுக்கும்போது வங்கிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…