திக்கத்தில் இருப்பவர்களுக்கு புரோக்கர் வேலை பார்த்த வரலாறே சங்கபரிவாரத்தின் 100 ஆண்டுகால வரலாறு. – இதுதான் தெரிந்த கதையாயிற்றே.. இப்போது அவர்களே ஆதிக்கத்தில் நேரடியாக அமர்ந்திருக்கிறார்களே என்று நினைக்கலாம். ஆனால் காட்டிக் கொடுக்கும் புத்தி என்றும் விலகாது என்பதற்கு சமீபத்திய சான்றுதான் சி.ஏ.ஏ சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக பாஜக எடுத்து நடத்தியுள்ள “மிஸ்டு கால்” இயக்கம்.

கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக-வின் உறுப்பினர் சேர்க்கையை நடத்துவதற்கு மிஸ்டு கால் இயக்கத்தை முதன்முதலில் தொடங்கியது. அப்படி நோகாமல் மிஸ்டுகால் கொடுத்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் காட்டியே உலகிலேயே அதிக உறுப்பினர் சேர்க்கையைக் கொண்ட கட்சி பாஜக என வெற்று அலப்பறை செய்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

மோடி – அமித்ஷா கும்பலைத் தொடர்ந்து அவர்களைப் போலவே வாயில் வடைசுடுவதில் கில்லாடியான ஜக்கி வாசுதேவ், மரங்களை நடவும், காவிரியை இணைக்கவும் ‘மிஸ்டுகால் புரட்சி’யைத் தொடங்கி வைத்தார். இப்படி பயணித்த ‘மிஸ்டுகால் புரட்சி’யின் வரலாற்றுக்கே ஒரு பெரும் ‘புரட்சியை’ சமீபத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது பாஜக.

சங்க பரிவாரக் கும்பலின் நெடுநாள் செயல்திட்டமான இந்துராஷ்டிரத்தைச் சட்டரீதியாக நடைமுறைப்படுத்தும் வகையிலான குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இயற்றியது பாஜக. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் தொடங்கின. அன்று தொடங்கிய இப்போராட்டங்கள் இன்றுவரை நாடுமுழுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

படிக்க :
ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

இந்நிலையில் இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் பெருவாரியான மக்களின் மத்தியில் ஆதரவு இருப்பதாகக் காட்டிக் கொள்ள ஒரு ‘மிஸ்டுகால் புரட்சி’ இயக்கத்தைத் தொடங்கியது பாஜக. அதாவது போராட்டம், ஆர்ப்பாட்டம், பரபரப்பு ஏதுமில்லாமல் வீட்டிலிருந்தபடியே நோகாமல் நோம்பு கும்பிடும் வகையில் மிஸ்டுகால் கொடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது பாஜக.

இதனை கடந்த ஜனவரி 3, 2020 அன்று அமித்ஷா தமது சமூக வலைத்தள கணக்குகளில் அறிமுகப்படுத்தி துவங்கிவைத்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்க 88662-88662 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஜனவரி 3, 2020 அன்று விடுக்கப்பட்ட இந்த அழைப்பிற்கு யாரும் செவிமடுக்கவில்லை போலத் தெரிகிறது. அப்படியே விட்டால் மானம் போய்விடும் என்று நினைத்த சங்க பரிவாரக் கும்பல், தனது ட்ரால் படையை மிஸ்டுகாலுக்கு ஆள் பிடிக்க களத்தில் இறக்கி விட்டது. மிஸ்டுகாலுக்கே ஆள்பிடிக்க வேண்டிய தமது இழிநிலையை எண்ணி ட்ரால்படைகள் கண்ணீர் சிந்தியிருக்குமோ இல்லையோ அமித்ஷா ஜி மனதிற்குள்ளாவது சிறிது கண்ணீர் சிந்தியிருப்பார்.

சமூக வலைத்தளங்களில் அடுத்தவர்களை இழிவுபடுத்தவும், மிரட்டவும், மேலிருந்து தரப்படும் குறுந்தகவல்களை அதே எழுத்துப் பிழையோடு ஈயடித்தான் காபி செய்து நிலைத் தகவல் பதிவிடுவதற்கு மட்டுமே பழக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சங்கி ட்ரால் படையிடம் போய், மிஸ்டுகால் கொடுக்க ஆள் பிடிக்கச் சொன்னால் என்ன செய்வார்கள் பாவம் ?

ஒரு பிரிவு ட்ரால் கூட்டம், பணரீதியாக ஊரை ஏய்க்கத் தொடங்கியது. மிஸ்டு கால் கொடுக்க வேண்டிய எண்ணைப் பதிவிட்டு, இந்த எண்ணிற்கு அழைப்புவிடுத்தால் ஆறுமாதத்திற்கு நெட்பிளிக்ஸ் சேனல் சந்தாவுக்கான இலவச இணைப்பு கிடைக்கும் என்று விளம்பரப் படுத்தத் தொடங்கியது.

இது வைரலாகப் பரவியதைக் கண்டு மிரண்டு போன நெட்பிளிக்ஸ் நிர்வாகம் பதறிப் போய் உடனடியாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் இத்தகவல்களை மறுத்து, அவை தவறான தகவல்கள் என விளக்கமளித்தது. பாவம் எத்தனை பேர் இதனை நம்பி அழைப்பு விடுத்து ஏமாந்து போய், நெட்பிளிக்ஸ் கஸ்டமர் கேர் எண்ணிற்கு அழைத்து காய்ச்சி எடுத்தார்களோ தெரியவில்லை.

இன்னொரு ட்ரால் கூட்டம், மோடி அரசின் மிகப்பெரும் சாதனையான வேலைவாய்ப்பின்மையையும் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி ஆள் பிடிக்க இறங்கியிருந்தது. புதிய வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க அமித்ஷா ஜி அறிமுகப்படுத்திய எண்ணைப் பதிவிட்டிருந்தது. ஏற்கெனவே வேலையின்றித் தவிக்கும் இளந்தலைமுறையை இதற்கு மேல் அவமானப்படுத்த வேறு எந்தக் கட்சியாலும் முடியாது.

படிக்க :
கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !
♦ ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

பெண்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு பாஜக ட்ரால் கும்பல், தனது அலைபேசியை தொலைத்து விட்டதாகவும், தனது எண்ணிற்கு அழைப்பு விடுத்து கண்டுபிடிக்க உதவுமாறும் பதிவிட்டிருந்தது. சரி யாரோ பெண்பிள்ளை கைபேசியைத் தொலைத்துவிட்டது; உதவி செய்யலாம் என அழைப்பு விட்டவர்களின் அழைப்புகளும் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவான அழைப்புக்களாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.

கூலிக்கு மாறடிக்கும் ட்ரோல்கள் மேற்கண்டவாறு தவறான தகவல்கள் மூலம் மிஸ்டுகால் புரட்சிக்கு ஆள்பிடித்துக் கொண்டிருக்க, உண்மையான ஆர்.எஸ்.எஸ். ரத்தம் ஊறியிருக்கும் கணிசமான ட்ரோல்கள் பெண்களைப் பண்டமாக்கி தங்களது ஆள்பிடிக்கும் கடமையைச் செய்துவந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பெண்களின் பெயர் கொண்ட ஐடியிலிருந்து, “நான் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன். அழையுங்கள் 8866288662.” ; “இன்று மிகவும் போர் அடிக்கிறது. எனது எண்ணை என் பின் தொடர்வாளர்களுக்கு பகிர விரும்புகிறேன் – அழையுங்கள் 8866288662” என்பது போன்ற வாசகங்களைப் பதிவிட்டு ஆள்பிடிக்கத் தொடங்கினர்.

இன்னொரு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தி நேரடியாக ‘மாமா’ வேலையையே செய்யத் தொடங்கியிருந்தார். “உங்கள் ஊரில் 69 சூடான பெண்கள் உங்களோடு பாலியல் உறவு வைக்கக் காத்திருக்கிறார்கள். அழையுங்கள் 8866288662”. என்று பதிவிட்டிருக்கிறார்.

சரி இதையெல்லாம் வைத்து ஒரே நாளில் பல கோடி மிஸ்டுகால்களைப் பெற்று சி.ஏ.ஏ. சட்டத்திற்கு அமித்ஷா ஆதரவு திரட்டியிருப்பார் என்று பார்த்தால், அமித்ஷா வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படியே வெரும் 52 லட்சம் பேர்தான் மிஸ்டுகால் கொடுத்திருக்கிறார்களாம்.

ஆள்பிடிக்க மெனக்கெட்ட சங்கிகள் தான் பாவம் ! பாஜக-விற்கு ட்ராலாக வாக்கப்பட்ட பாவத்திற்காக இணையத்தில் ‘மாமா’ வேலை வரை பார்த்தும் ஒன்றும் பலனில்லாமல் போய்விட்டதே ! வருத்தம் இருக்காதா பின்னே !


நந்தன்
நன்றி : தி வயர்

 

2 மறுமொழிகள்

  1. மிகச் சிறப்பாக அம்பலப்படுத்தி இருக்கிறது வினவு தளம்.

    அம்பலப்படுத்துவது ஒன்றே இந்த கேவலப்பட்டவர்களை வறுத்தெடுக்க நம்மவர்கள் செய்ய வேண்டிய முதல் செயல்.
    அம்பலப்படுத்துவோம்…
    அரைவேக்காடுகளை வேரறுப்போம்…..

    மருதுபாண்டியன்
    பத்திரிகையாளர்

Leave a Reply to K SHANMUGAM பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க