சென்னையில் நடைபெறும் 43-வது புத்தகக் கண்காட்சியில்
வாங்க வேண்டிய நூல்கள் குறித்து ஒரு பார்வை !

ரலாற்றில் இருந்து நாம் கற்க வேண்டிய படங்களை நூல்கள் கற்றுத் தருகின்றன. இன்றைய பாசிச சூழலை எதிர்கொள்வதற்கான உத்திகளை தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய நூல்களைப் பட்டியலிடுகின்றனர் பிரபல வெளியீட்டகங்களான பாரதி புத்தகாலயம், நீலம் மற்றும் நிமிர் ஆகியவற்றின் நிர்வாகிகள் !


நூல்கள் : காவி இருளை விரட்டும் அறிவொளி ! | சுப. வீரபாண்டியன் | ஓவியா | மருதன்

சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 43வது புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களின் தேவையை பற்றி எழுத்தாளர் ஓவியா, எழுத்தாளர் மருதன், கருஞ்சட்டை பதிப்பகத்தில் இருந்து சுப. வீரபாண்டியன் இந்தக் காணொளியில் விளக்குகிறார்கள் !


சமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி |
மகிழ்நன் | மருத்துவர் ருத்ரன் | பேரா.சுந்தரவள்ளி

சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 43 -வது புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் வாசிப்பின் தேவை குறித்து விளக்குகிறார்கள், மகிழ்நன், வசன எழுத்தாளர்.,
ருத்ரன், மனநல மருத்துவர், த.கணேசன், பு.மா.இ.மு., பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர்.

* இது புத்தகத் திருவிழா! கொண்டாடித் தீர்க்க வேண்டும்!
இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது மகிழ்ச்சிக்குரிய விசயம்தான். வாசிப்புதான் இளைஞரின் அனுபவத்தை கூர்தீட்டும். உரையாடலை நிகழ்த்துகிறபோது, இன்னும் அடுத்தக் கட்டத்துக்கு செல்லும்.

* வாட்சப், சமூக ஊடகங்களில் காணும் செய்திகளைத் தாண்டி புத்தகத்தைப்படி. குறைந்தபட்சம் எதையாவது படி!

* நாட்டைப்பற்றி புரிந்துகொள்ள சமூக நடப்புகளை அறிந்துகொள்ள தினந்தோறும் குறைந்தபட்சம் நான்கு பக்கங்களையாவது படிக்க முயற்சியுங்கள்… நாளைக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்காக படியுங்கள்!

* போராட்டக் களத்தில் நிற்கிறோம். எதிரிகளை எதிர்க்கிறோம். அதிகாரத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக பெருந்திரளாகக் கூடுகிறோம். இவற்றுக்கெல்லாம் எது ஆயுதம்? அறிவாயுதம்தான் ஆயுதம். அறிவாயுதத்தை கையில் எடுக்கும்பொழுதுதான் எதிரிகள் அச்சம் கொள்வார்கள். அறிவாயுதம் ஒருபோதும் தோற்காது.


அறிவுப் பசியை தீர்க்க புத்தகக் கண்காட்சிக்கு வாங்க ! வாசகர்கள் பரிந்துரை !

சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 43 -வது புத்தகக் கண்காட்சியில் கல்லூரி மாணவர்கள் – இளைஞர்கள் தாங்கள் தேர்வு செய்த நூல்கள் குறித்து வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

புத்தகங்களின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவிட்டதா? பதிலுரைக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள்…

பாருங்கள் ! நண்பர்களுக்கு பகிருங்கள் !