திரௌபதி, அல்லி, ஆரவல்லி – சூரவல்லியைக் கண்டு வலதுசாரிகள் ஏன் அஞ்சுகிறார்கள்?

கடந்த ஜனவரி 4, 2020 அன்று சென்னை சி.பி.ராமசாமி ஐயர் இந்தோலாஜிக்கல் ஆய்வு மையத்தில் ஜேஎன்யூ பேராசிரியர் விஜயா ராமசாமியின் ‘மகாபாரதத்தில் பெண்கள்’ சொற்பொழிவு நிகழ இருந்தது. வலதுசாரிகளின் மிரட்டல் காரணமாக பேரா. விஜயா ராமசாமியின் நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ‘விருப்பமற்ற மணப்பெண்கள், விலகிநிற்கும் மனைவிகள், வஞ்சகமிக்க தந்திரக்காரிகள் : தமிழ் மகாபாரத்தில் பெண்கள், திரௌபதி, அல்லி மற்றும் ஆரவல்லி – சூரவல்லியின் மீதான பார்வை’ என்ற பெயரில் பேராசிரியர் நிகழ்த்தவிருந்த சொற்பொழிவின் சுருக்கப்பட்ட வடிவம் த வயர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே…

காபாரதத்தின் முக்கியமான பதிப்புகள் ஆண்களால், பார்ப்பன பார்வையில் எழுதப்பட்டவை. உண்மையில் அப்படி இல்லையென்றாலும், ஆணாதிக்க கண்ணோட்டத்தில் அல்லது கட்டமைப்பிற்குள் பொருந்தும்படியாக எழுதப்பட்டவை. இவை சமஸ்கிருத – பார்ப்பனிய மற்றும் ஆணாதிக்க  கண்ணோட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில விளக்க மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சட்டங்களுக்குள் பெண்களை அவை உறைய வைத்துள்ளன.

பேராசிரியர் விஜயா ராமசாமி.

மறுபுறம், பிராந்திய  ரீதியில் வேறுபட்ட மகாபாரத்தில் காவிய கதாபாத்திரங்களின்  சித்தரிப்புகள் மிகவும் தளர்வாக இருக்கின்றன. துரியோதனன் மற்றும் கர்ணன் போன்ற நபர்கள், எதிர்மறையான சொற்களில் ‘தீய’ சக்திகளாகக் குறிப்பிடப்படுகிறார்கள், இத்தகைய சித்தரிப்புகள் பிராந்திய பதிப்புகளுக்குள் மிகவும் நுணுக்கமான மற்றும் குறைந்த சார்புடைய இடத்தைப் பெற்றுள்ளன.

குறிப்பாக காவியத்திற்குள் உள்ள திரௌபதி, காந்தாரி மற்றும் கர்ணனின் மனைவி பொன்னருவி போன்ற பெண் கதாபாத்திரங்கள் பெண் கதாபாத்திரங்களில் இது உண்மையாக உள்ளது.

கர்ணனின் மனைவியாக விருஷாலி (துரியோதனனின் தேர் ஓட்டியின் மகள்) யாக முக்கியமான பதிப்புகளின் வருகிறது. மாறாக  பொன்னருவியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விருஷாலியின் குறைந்த சமூக அந்தஸ்துக்கு மாறாக, கர்ணனின் வாழ்க்கையின் தமிழ் பதிப்பில், பொன்னருவி அரச வம்சத்தைச் சேர்ந்தவர், கலிங்க இளவரசி என்று கூறப்பட்டிருக்கிறார்.

19-ம் நூற்றாண்டில்தான் மெட்ராஸ் பிரசிடென்சியில் மகாபாரதம் ஆண்கள் – பெண்கள் உள்ளிட்ட சாமானியர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.

சித்ரங்கதா.

மலிவான விலையில் பிரபலமான நாட்டுப்புறக் கதைகள் ‘குஜிலி’ இலக்கியம் (இது குஜராத்தி வணிகர்களைக் குறிக்கிறது) என்ற பெயரில் சந்தையில் நுழைந்து, புதிய வாசகர்களைப் பெற்றது; குறிப்பாக பெண்கள் மத்தியில். தமிழ் மகாபாரதங்களிலிருந்து வரும் துண்டுகள், சேர்த்தல் மற்றும் இடைக்கணிப்புகளுடன், அல்லது இரண்டையும் கடந்து, முற்றிலும் புதிய கதாநாயகர்களுடன், மகாபாரதத்திலிருந்து வரும் கதாபாத்திரங்களின் புரிதலை மாற்றி, எதிர் கதாநாயகர்கள் மற்றும் போர்க்குணமிக்க, காவியத்தின் விளிம்புகள் அல்லது அதற்கு வெளியே இருந்த இணக்கமற்ற பெண்களை மையமாகக் கொண்டுவந்தன.

பல துண்டு துண்டான மகாபாரதங்களின் தமிழ் பதிப்புகளில், முக்கியமான பதிப்புகளில் முக்கிய பெண் கதாபாத்திரமாக உள்ள திரௌபதி போன்ற கதாபாத்திரங்கள்  மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.  சமஸ்கிருத பதிப்பில் சித்ரங்கதா என உள்ளவராக அறியப்படுகிறவர், அல்லி அரசானி போன்றவற்றில் முக்கிய கதாபாத்திரமாகிறார்.

சிமோன் தி போவார் சொல்வது போல், “பெண்களால் ஆராய்ச்சி செய்யப்படும் பெண்களின் நாட்டுப்புறக் கதைகள் இத்தகைய ஆய்வுகளில் உள்ள பெண்களை ‘பொருள்கள் என்பதைக் காட்டிலும் உண்மையிலேயே பாடங்களாக’ காட்டுகின்றன.”

மிகப்பெரிய காவியத்திலிருந்து கதை சொல்ல முறையில் மாற்றமடையும் செயல்முறையின் சூழல் குறித்து தமிழ் மகாபாரதங்களை ஆய்வு செய்யும்போது, சமஸ்கிருதமற்ற, ஓரளவிற்கு உள்ளூரை முதன்மையாகக் கொண்டு புதிய பிறப்பெடுத்துள்ளது தெரிகிறது. அல்லி, பவழக்கொடி, பாம்பு இளவரசி உலுபி, சிவ பக்தையான மின்னொலியாளும் அவர்களுக்கு அர்ஜூனனுடனான திருமணமும் ஒரு பெரிய காவியத்தின் பெரிய  விவரிப்புகளை உடைத்து, பிரதான பதிப்பில் இல்லை (வியாசரின் மகாபாரதம்) இல்லாதவர்களை மைய நிலை நபர்களை முழுமையாகக் கொண்டுவருகின்றன.

பொன்னருவி மசக்காய், கர்ண மோட்சம் மற்றும் கர்ணமகாராஜன் சண்டை போன்ற கதைப்பாடல்கள் கர்ணனின் மனைவி பொன்னருவியின் விவரிப்புக்கு கவனத்தை தருகின்றன, அவரின்  ‘தாழ்ந்த சாதி’ கணவர் வெறுப்பு மற்றும் அவரது தேவையற்ற கர்ப்பம், சாதி மற்றும் வர்க்கம் ஆகியவற்றின் மீது கூர்மையான கவனத்தைச் செலுத்துகிறது.

குருக்ஷேத்ரா போரின் 17-வது நாளில் கர்ணன் இறப்பதற்கு முன், அவன் பிறந்த ரகசியம் வெளிப்படுத்தப்படுகிறது, இது அவளது விரக்தியை வருத்தமாக மாற்றுகிறது. எனவே இந்த துண்டு துண்டான விவரிப்புகள் அவை உண்மையிலேயே எதிர் – கதைகளாக இருக்கின்றனவா அல்லது ஆணாதிக்க பிரதான நீரோட்டத்தில் சமூகமயமாக்கப்படுகின்றனவா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு பெரிய விவரிப்பின் குறிப்பிடத்தக்க பிராந்திய மாறுபாடுகளாக இருக்கின்றன.

திரௌபதி ஒரு தெய்வமாக வணங்கப்படுவது தமிழர்களிடையே மட்டுமே உள்ளது. தமிழகம் முழுவதும் திரௌபதி அல்லது பஞ்சாலி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுமார் 300 கோயில்கள் உள்ளன.

தமிழ் மகாபாரதங்களைப் பற்றிய எனது ஆய்வில், விமர்சனப் பதிப்புகளில் குந்தி, காந்தாரி மற்றும் திரௌபதி ஆகிய கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, முக்கியமான பதிப்புகளில் குறிப்பாக திரௌபதியின் அதிக தளர்வான பிரதிநிதித்துவங்களுக்கு எதிராக இணைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக திரௌபதி  கதாபாத்திரம் மகாபாரதத்தின் மறு கதைசொல்லலான எஸ்.சுப்ரமண்ய பாரதியாரின் பஞ்சாலி சபதத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

திரௌபதியின் தன்மை மற்றும் பாத்திரத்தை மீண்டும் சொல்வதில் சமமான முக்கியத்துவத்துடன் திரௌபதி குறம் அல்லது குறவஞ்சி போன்ற நாடக நூல்கள்.

தமிழ் சமூகங்களால் திரௌபதியை தெயவாக்கும் செயல் சில நூற்றாண்டுகளில் திரௌபதி அம்மன் வழிபாட்டை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், காந்தாரியை பல தமிழ் சாதியினரும் தெய்வமாக வணங்குகிறார்கள்.

பேராசிரியர் ஆர். ஸ்ரீனிவாசன், நல்லப்பிள்ளை பாரதத்துக்கு எழுதிய தனது அறிமுகத்தில், திரௌபதி வழிபாட்டு முறையே மகாபாரதத்தின் விரைவான பரவலுக்கு,  குறிப்பாக கதை மற்றும் செயல்திறன் முறையில் பரவியதற்கு காரணம் என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், தமிழர்கள் கணிசமான புலம்பெயர் சமூகமாக குடியேறிய இடங்களில் – பிஜி மற்றும் ரீயூனியன் தீவுகள் போன்ற பகுதிகளில், தமிழர்களிடையே திரௌபதி மற்றும் காந்தாரி அம்மன் ஆகிய இருவரையும் சுற்றி கொண்டாடப்படும் திருவிழாக்களில் தீ மிதிக்கும் சடங்கு நடைமுறையில் உள்ளது.

தமிழ் பிராந்தியங்கள் முழுவதும் கொண்டாடப்படும் திரௌபதி திருவிழாவின் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன. குறிப்பாக அதன் வடக்குப் பகுதியில் – பாரத பிரசாங்கி (மகாபாரதத்தின் நாடகக் கதையை முன்வைக்கும் கலைஞர்கள்) ஒவ்வொரு மாலையும் மகாபாரதம் பாராயணம் செய்யப்படுகிறது; பாரத கூத்து என்ற நாட்டுப்புற வடிவம், தெரு கூத்து என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது தெரு நாடகம், இது காவியத்தை அடிப்படையாகக் கொண்ட இரவு நிகழ்ச்சிகள்; மற்றும் தீ  மிதித்தல், அல்லது தீயில் நடத்தல் ஆகியவை திரௌபதி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுச் செயலாகும். உலுபி மற்றும் அர்ஜுனனின் மகனான அரவனின் கதையைப் பற்றிய கூத்தாண்டவவர் திருவிழா பெரும்பாலும் திரௌபதி வழிபாட்டு சடங்கு விழாக்களுடன் இணைக்கப்படுகிறது.

கூடுதலாக, மகாபாரதத்துடன் இணைக்கும் அல்லி நாடகம் மற்றும் அல்லி அரசாணி மாலை ஆகியவை பெரும்பாலும் பெண்களால் படிக்கின்றன, மேலும் அவை தெரு கூத்து அல்லது வில்லு பாட்டாகவும் நிகழ்த்தப்படுகின்றன.

காலவரிசைப்படி இல்லாத மலாயத்வஜ பாண்டியன் என்ற மன்னரின் ஒரே குழந்தை அல்லி என்று கூறப்படுகிறது. பாண்டிய இராச்சியத்தின் தலைநகரான மதுரை அல்லி புராணத்தின் இருப்பிடம். திருவிலையாடல் புராணத்தில் மதுரை மூன்று மார்பகங்களைக் கொண்ட மீனாட்சியால் ஆளப்பட்டது என்ற பார்வையின் அடிப்படையில் அது உருவாக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு தியாகமான ‘புத்ரா காமேஷ்டி யாக’த்தின் முடிவில், அல்லி ஒரு ‘அல்லி’ அல்லது பூவில் கிடந்தார் எனவும் இது ஒரு அதிசயமான பிறப்பு என்றும் கூறப்படுகிறது. தெய்வீக ஆட்சியாளரான மீனாட்சியைப் போலவே, அல்லியும் தற்காப்புக் கலைகளில் பயிற்சியளிக்கப்பட்டு, புனித நூல்களையும், ஆட்சி நூல்களையும் கற்க ஒரு குருகுலத்துக்குச் சென்றார்.

பாண்டிய சிம்மாசனத்தை கைப்பற்றிய நீன்முகனை போரில் தோற்கடித்து அல்லி தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்; ஆட்சியாளராக முடிசூட்டப்பட்டார். அல்லி கொடுங்கோலரை எதிர்த்து இராணுவத்தை வெற்றிகரமாக வழிநடத்தியதாக அல்லி கொடை என்ற கதைப்பாடல் கூறுகிறது. மேலும்  வீரம்மிக்க அல்லி கொடுங்கோலன் நீன்முகனை அழித்த காரணத்தால் மதுரையே புகழையும் பெருமையையும் பெற்றது என்கிறது.

அவர் அனைத்து இடங்களிலும் பெண்களை மட்டுமே கொண்டு ஆட்சி செய்தார். எனவே பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் வீட்டுக்கு ‘அல்லி ராஜ்யம்’ என்ற பிரபலமான பழமொழி தமிழில் உண்டு. அல்லி அரசாணி மாலை கூறுகிறது:

அல்லியின் பெயரைச் சொன்னால்
பறவை கூட தண்ணீரைப் பருகாது
அல்லியின் பெயரைச் சொன்னால்
பூத கணங்கள் ஆடுவார்கள்.
அல்லியின் பெயரைச் சொன்னால்
வெட்டப்பட்ட தலைகளும் உளரும்!

அர்ஜுனன் அல்லியால் ஈர்க்கப்பட்டு அவளை திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ளும்போது, புலந்திரன் பிறப்பதன் விளைவாக அல்லி விவரிப்பு மகாபாரத காவியத்துடன் இணைகிறது.

முக்கியமான சமஸ்கிருத பதிப்பில், அல்லியின் கதை சித்ரங்கதா மற்றும் அவரது மகன் பாப்ருவஹானாவுக்கு இணையாக உள்ளது. அல்லி கதையின் இந்த திருப்பம், பார்வையாளர்கள் பெரும்பாலும் ஆண் பார்வையாளர்களாக இருந்ததால், அது தமிழ் மேடை மற்றும் சினிமாவுக்குள் நுழையும் போது அது ஒரு ஆணாதிக்க விவரிப்புடன் இணைக்கப்படுகிறது.

படிக்க:
2002 குஜராத் வன்முறை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை !
5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !

ஆயினும்கூட, ஒரு உரையாக அல்லி கதை பெண்களால் விரிவாகப் படிக்கப்பட்டது; ஒரு மாறுபட்ட உரையாகக் காணப்பட்டது.

மறைமலை அடிகளின் (1916-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தனி தமிழ் இயக்கத்தின் இணை நிறுவனர்) மகள் நீலாம்பிகை அம்மையார்  இவ்வாறு எழுதினார்:

“அல்லி அரசாணிக்கோவை, பவளக்கொடி மாலை, ஏணி ஏற்றம் போன்ற நூல்களைப் படிக்க பெண்களை அனுமதிக்கக்கூடாது, அவை மோசமான வழிகளில் கொண்டு செல்லக்கூடும். அவர்கள் இரவும் பகலும் இதுபோன்ற நூல்களைப் படிப்பது மட்டுமல்லாமல், தவறான கோட்பாடுகளான கைவல்ய நவநீதம் போன்ற புத்தகங்களையும் (பிராமண சமஸ்கிருத நூல்கள்) படிக்கிறார்கள்.”

ஒருபுறம், நீலாம்பிகை அம்மையாரின் அறிக்கை அல்லி புராணத்திற்கான ஆணாதிக்க பதில்களைக் குறிக்கிறது, அதாவது இது முறைகேடு நிறைந்ததாகவும், சூழ்ச்சியாகவும் கருதப்பட்டது. அதே சமயம், பெண்களை மையமாகக் கொண்ட இந்த மகாபாரத துண்டுகளை பெண்கள் ஆர்வத்துடன் படிக்கிறார்கள் என்பதை அவளுடைய அச்சங்கள் நிரூபிக்கின்றன.

முடிவாக, தமிழ் மகாபாரதங்கள், உரை துண்டுகளாக இருந்தாலும், நிகழ்த்து கலைகளாக இருந்தாலும், சாதி மற்றும் பாலின தடைகளை குறிப்பிடத்தக்க வழிகளில் உடைத்து, சமஸ்கிருத மகாபாரத காவியத்திலிருந்து வேறுபட்டிருப்பதைக் காட்டுகின்றன. அவற்றின் பன்மடங்கு வடிவங்களில் அவை பார்ப்பன ஆணாதிக்க விவரிப்புகளின் வெவ்வேறு பக்கங்களைக் குறிக்கின்றன.

கட்டுரையாளர்:பேராசிரியர் விஜயா ராமசாமி
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : தி வயர்

1 மறுமொழி

  1. கிழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பித்துவிட்டதா இல்லையா? ஜனவரி மாதம் கைசி வாரத்தில் தொடங்குவதாக மாநில அரசு அறிவித்தது. எந்தெ செய்தி தளத்திலும் இதுகுறித்து எந்த செய்தியும் இல்லை. அது தொடங்கியதா இல்லையா என யாராவது சொல்லமுடியுமா? இல்லை எனில் ஏன் தாமதம் ஆகிறது என தெரியுமா? யாராவது பதில் இடவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க