தஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள ஐயந்திருவள்ளுவர் நகர்,உப்பரிகைத்தெரு, வனதுர்கா நகர், சரஸ்வதி நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற பெண்கள் கொண்ட எழுபது குடும்பங்களுக்கு அரிசி, மசாலாப் பொருட்கள் கொண்ட தொகுப்பு மக்கள் அதிகாரத்தின் சார்பில் கொரோனா நிவாரண உதவியாக 01.05.2020 அன்று வழங்கப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தேவா, பாலாஜி, பொறியாளர் சந்திரமோகன் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
காளியப்பன்,
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.