காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இதற்குப் பெரும் கேடு விளைவிக்கும் வகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத் துறையின் கீழ் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

அரசியல் சட்டப்பிரிவு 77.3 பயன்படுத்தி அமைச்சகங்களுக்கு பணிகளை ஒதுக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின் படி 1961 பணிகள் ஒதுக்கீடு விதிகளின் கீழ் அறிவித்துள்ளது காவிரி நீர் மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனம் இதில் மத்திய அரசு மட்டுமின்றி தொடர்புடைய நபருக்கு மாநில அதிகாரிகள் கொண்ட அமைப்பு இந்த அமைப்பை நீர்வளத் துறையின் ஒரு பிரிவாக மாற்றி இருப்பதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை குறுக்கு வழியில் முடக்கும் செயல் மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுமாகும் அரசியல் ஆதாயங்களுக்காக தமிழக விவசாயிகளின் பாசன குடி நீர் உரிமையை மத்திய அரசு மறுக்கும் ஆபத்து நிறைந்தது எனவே மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத மக்கள் விரோத நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும்

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் 2003 மத்திய மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட்ட கொண்டுவரப்படவுள்ள சட்ட திருத்தம் மின் உற்பத்தி விநியோகம் விலை நிர்ணயம் அனைத்தையும் தனியார் மயமாக்குவது ஓடு விவசாயிகள் நெசவாளிகள் வீட்டு உபயோகம் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் சலுகை இலவச மின்சாரம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது மாநில மின் வாரியங்கள் அதன் கட்டமைப்பு ஆகியவற்றை தனியார் மின் உற்பத்தியாளர்களின் முகவர்களாக மாற்றுகிறது அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை விற்கவும் சட்ட திருத்தம் வகை செய்கிறது மின்கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் எப்போதும் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது திருத்தம் நடைமுறைக்கு வந்தால் விவசாயம் சிறு தொழில் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் பணம் இருப்பவனுக்கு மின்சாரம் என்ற நிலை உருவாகும் எனவே இதனையும் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்

மேலும்.. தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை உரிமையை பறித்து 12 மணிநேர வேலை என சட்டமாக்கி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் நோக்கத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிதி தேவைகளை தர மறுப்பது மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி நிதியையும் பறித்துள்ளது. ஆகவே மாநில உரிமைகளை காக்க மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்க வேண்டும். என்பதை கீழ் கண்ட அமைப்புகள் சார்பில் இன்று 13.05.2020 காலை 11 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு கொடுக்க சென்றோம். போலீசு ஒரு நபர் மட்டுமே செல்ல வேண்டுமென கூறினர்.

படிக்க:
♦ கொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் !
♦ ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !

ஆட்சியர் வீடியோ கான்பரசில் உள்ளதால் பிறகு அவரது நேர்முக உதவியாளர் வந்து கோரிக்கைகளை கேட்டு மனுக்களை பெற்று கொண்டார். மக்கள் அதிகாரம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் ஒற்றுமையான இந்த நடவடிக்கை போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் இருந்தது.

பங்கேற்ற அமைப்புகள்,

1. லெ.செழியன். திருச்சி மண்டல ஓருங்கிணைப்பாளர் . மக்கள் அதிகாரம்
2. ம.பா.சின்னத்துரை திருச்சி மாவட்டத் தலைவர் தமிழக விவசாயிகள் சங்கம்.( கட்சி சார்பற்றது)
3. ம. ஜீவா.மாவட்ட செயலர். மக்கள் கலைக் இலக்கியக் கழகம் திருச்சி
4. தமிழாதன் பெரம்பலுர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி .
5. கமலக்கண்ணன். மாவட்ட செயலர். தந்தை பெரியார் திராவிடர் கழகம் .
6. ரவிக்குமார். மாவட்ட செயலாளர். சமூக நீதி பேரவை
7. காவிரி உரிமை மீட்புக் குழு
9. கவித்துவன். தமிழ் தேசிய பேரியக்கம்
10. சம்சுதீன் மாவட்ட தலைவர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி .
11. ஜோசப்.மாவட்ட து. தலைவர் மக்கள் உரிமைக் கூட்டணி
12. பஷீர். மாவட்ட தலைவர் மக்கள் உரிமை மீட்பு இயக்கம்.

தகவல்
மக்கள்அதிகாரம் .
திருச்சி
போன்: 94454 75157

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க