மே 22 அன்று மக்கள் அதிகாரம் கோவை பகுதி சார்பாக தூத்துக்குடி தியாகிகளின் 2 -ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமையேற்று நடத்தினார். இதில் புரட்சிகர இளைஞர் முன்னணி கோவை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் மலரவன், தி.மு.க. பகுதிப் பொறுப்பாளர் திரு. ராஜன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் நேருதாஸ், சமூக ஆர்வலர் திரு கோவை கதிர் மற்றும் திரளான பகுதி மக்கள் பங்கேற்றனர்.

தோழர் மூர்த்தி தனது தலைமை உரையில் ஸ்டெர்லைட் ஆலை பற்றிய விபரங்களையும், அதை மூடக்கோரி நடந்த போராட்டத்தையும் பற்றி சுருக்கமாக விளக்கிக் கூறினார். மக்கள் அதிகாரம் தோழர் ஜூலியஸ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசு கட்டமைப்புக்குள் எந்தத் தீர்வும் கிடைக்காது என்பதையும், பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டாலும் ஒற்றை நோக்கத்திற்காக இணைந்து வேலைசெய்ய வேண்டியதன் அவசியத்தை பற்றியும் பேசினார்.

தோழர் மலரவன், மக்களுக்கு எதிரான ஒரு அரசமைப்பு அது எத்தகைய பலம் வாய்ந்ததாக இருந்தாலும், மக்களின் போராட்டம் அவற்றையெல்லாம் தகர்த்தெறியும் என்று விளக்கினார். தோழர் நேருதாஸ் மற்றும் கோவை கதிர் ஆகியோர் இன்றைய சமூக நிலைமைகள் பற்றியும் அரசியல் நிலைமைகள் பற்றியும் விளக்கிப் பேசினார். மக்கள் அதிகாரம் தோழர் ராஜன் புரட்சிகர பாடலைப் பாடினார். நிகழ்ச்சி சிறந்த முறையில் பகுதி மக்களின், குழந்தைகளின் பங்கேற்புடன் நடைபெற்றது. மக்கள்  தோழர்களை உற்சாகப்படுத்தினர்.

தூத்துக்குடி தியாகிகளின் நினைவஞ்சலி நிகழ்வானது பகுதி மக்களுக்கு இந்த மக்கள் விரோத அரசுகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதாகவும், மக்கள் போராட்டமே பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்பதை உணர்த்துவதாகவும் இருந்தது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை.

***

ஸ்டெர்லைட்எதிர்ப்புபோராளிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  புவனகிரி வட்டம் பெரியகுப்பம் கிராமத்தில், மாணவர்கள் – இளைஞர்கள் என அனைவரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க