அன்பார்ந்த நண்பர்களே பொதுமக்களே வணக்கம்,
கடந்த நான்கு மாத காலமாக கொரோனா பிரச்சனையில் வாழ்க்கையை ஓட்ட முடியாமல் பலரும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். வேலை இல்லை காசு இல்லை. பல குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன இந்நிலையில் நுண் கடன் நிதி நிறுவனங்களால் சுய உதவி குழு கடன் மற்றும் வாகன கடன்களுக்காக வீட்டுக் கடனுக்காக நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
இதில் ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று ஆகஸ்ட் 31 வரை தவணையும் வட்டியும் கட்ட தேவையில்லை, மீறி கட்டாயப்படுத்தும் வங்கிகள் நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்று அறிவிப்பும் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த அறிக்கையை மீறி பல இடங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சுய உதவி குழுக்கள் போன்றவை மிரட்டி பணம் பறிப்பதை எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டி இயக்கத்தை மேற் கொண்டது.
கடலூர் மண்டலத்தில் சீர்காழி வட்டார பகுதியில் கடந்த 17 ஆம் தேதி இரவு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த தோழர்கள் கிஷோர் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோரை போலீஸ் மிரட்டி செல்போனையும் இரு சக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு காலையில் ஆறு மணிக்கு ரவியுடன் வரவேண்டுமென்று விரட்டி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் சில இடங்களில் போஸ்டரையும் கிழித்தனர்.
அதிகாலையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் கிஷோர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் காவல் நிலையம் சென்ற போது அங்கே கிஷோரும் தமிழ்ச்செல்வன். வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் மீது பொய் வழக்குப் போட்டது. போலீஸ் இரவுவரை இழுத்தடித்து இரவு 9 மணிக்கு கீழமை நடுவர் நீதிமன்றத்தில் முன்பாக ஆஜர்படுத்தியது. அப்போது முதல் தகவல் அறிக்கையை பார்த்த நீதிமன்ற நடுவர் தேவையில்லாத காரணங்களை கூறி உள்ளீர்கள் என்று விமரிசித்தார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவி மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவே அவரை விடுதலை செய்கிறேன் என்றார். இவை மட்டுமில்லாமல் பொய் வழக்கை பற்றியும், போலீசாரின் தவறுகள் பித்தலாட்டங்களை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்த நீதிமன்ற நடுவர், பின்னர் கிஷோர் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் சீர்காழி கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த செய்தி கிராமங்களிலுள்ள பொதுமக்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவியது பல இடங்களில் பொதுமக்கள் சுய உதவிக்குழு ஊழியர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து விரட்டி அடித்து வருகிறார்கள்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி – நாகை மாவட்டம்.
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு : 98434 80587.