“ஆகஸ்ட் 30 : உலக காணாமலடிக்கப் பட்டோர் தின”த்தையொட்டி 29.08.2020 சனிக்கிழமை அன்று தஞ்சை இரயிலடியில் “கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்” தாளாண்மை உழவர் இயக்க நிறுவுனர் தலைவர் தோழர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய தோழர் காளியப்பன் மேலும் கூறியதாவது. “ஐக்கிய நாடுகள் மன்றம் அன்னையர் தினம், பெற்றோர் தினம் என்று 365 நாட்களுக்கும் அறிவித்துள்ளது. கைகழுவும் தினம் என்றுகூட ஒரு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தினங்களைப்போல உலக காணாமல் அடிக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட 30-ஐ கருதக்கூடாது.
அரசியல் எதிரிகளை கடத்திக் கொலை செய்வது, அப்பாவிகளை கடத்தி கொலைசெய்து சமூகத்தை அச்சுறுத்துவது என்று பாசிச அரசுகள் செயல்படுகின்றன.அது இப்போது எல்லைகடந்து சமூக விரோதிகள் பெண்களை கடத்தி காணாமல் அடித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது, குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துவது என்று வளர்ந்திருக்கிறது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நீதிமன்றங்கள் உட்பட அரசு இயந்திரங்கள் இதற்கு துணை நிற்கின்றன என்ற செய்திகள் நமக்கு அச்சமூட்டுகின்றன. ஈழப் போராட்டத்தில பல ஆயிரம்பேர் இலங்கை இராணுவத்தால் கடத்தி கொலை செய்யப்பட்டார்கள் என்று ஐ.நா.மன்ற விவரங்களே கூறுகின்றன. ஈழத்திலும், காஷ்மீரிலும் காணாமலடிக்கப்பட்வர்கள் குறித்து விசாரணை செய்ய அரசுகள் ஒத்துழைப்பு தரவில்லை. ஐ. நா. மன்றம் குற்றவாளிகள் குறித்து விசாரிக்க விசாரணைகுழு அமைத்து விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
இந்த ஆர்பாட்டத்தில் AITUC மாவட்டச் செயலர் தோழர் தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் தோழர் என். பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சேவையா, ம.க.இ.க தோழர் இராவணன் மற்றும் தோழர் அருள், மனிதநேய ஐனநாயக கட்சி எ. ஜே. அப்துல்லா மற்றும் சமுக ஆர்வலர்கள் விசிறி சாமியார் முருகன், குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து கட்சிகள் இயக்கங்கள் சார்பாக துரை மதிவாணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றியுரையாற்றினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.
பாசிச அரசுகளின் பேயாட்சிக்கு எதிராக கொரான நோய் தொற்று நேரத்திலும் விசிறி சாமியார் உள்பட சமூக உணர்வாளர்களை ஒன்றிணைத்திருப்பது சிறப்பு. புரட்சிகர வாழ்த்துக்கள்.