நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மதுரையில், நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 12.09.2020 அன்று ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோத்திலால் என 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த கொரோனா நெருக்கடியிலும்
நீட் தேர்வை திட்டமிட்டபடி மத்திய, மாநில அரசும் நடத்துகிறது‌. இதைக் கண்டித்தும் இனிமேலும் நீட் மரணங்கள் நடக்கக்கூடாது நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், என்றும் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் விடுதலை கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே17, திராவிடர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் கலை – இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், போன்ற அனைத்து முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மரணமடைந்த மாணவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது. இந்தப் போராட்டத்தை தடுப்பதற்கு வந்த போலீசாரோடு, வாக்குவாதம் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தகவல்:
நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு,
மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க