PP Letter head

13.11.2020

பத்திரிகைச் செய்தி

ங்கம் சேரக்கூடாது, தொழிற்சாலைக்கு எதிராகப் போராடக்கூடாது, சம்பள உயர்வு கேட்கக் கூடாது, போனஸ் கிடையாது, நிரந்த வேலைக்கு உத்திரவாதம் கிடையாது, ஓய்வூதியம் தர முடியாது, ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு, தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சிதைப்பது, குறைந்தபட்ச ஊதியத்திற்கு குந்தகம் விளைவிப்பது என பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் வகையில்தான் இந்த தொழிலாளர் நல சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, கொத்தடிமை முறையிலான சட்டங்களை இயற்றி வருகிறது பாஜக அரசு. ஏட்டளவிலாவது இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களில், 15 சட்டங்களை ரத்து செய்து விட்டு, மீதமுள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி, தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளது.

முதலாளித்துவ சுரண்டலுக்காக தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. தொழிலாளர் நல சட்டங்களும் வேளாண் சட்டங்களும் கல்விக் கொள்கைகளும் மாற்றியமைக்கப்படுகின்றன. அரிசி, நெல், கோதுமை, காய்கறி முதல் பெட்ரோல் வரை அனைத்து பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே இருக்கிறது. எனவே தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளுக்கு எதிரான இந்தப் போராட்டம் வெல்லட்டும்.

அகில இந்திய தொழிற் சங்கங்களின் இந்தப் போராட்டத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது. மேலும் இந்தப் போராட்டங்களில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமையுடன்


வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு மற்றும் புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க