நவம்பர் 26 அன்று இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு புரட்சிகர தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் தமிழகத்தில் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டக் காட்சிகள் :
திருநெல்வேலி :
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி.
நவம்பர் 26 : வேளாண் திருத்த சட்டத்தை அனுமதியோம், தொழிலாளர் சட்ட மசோதாவை வீழ்த்த அணி திரள்வோம், கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் என்ற முழக்கங்களின் அடிப்படையில் அகில இந்திய அளவில் நடைபெறும் தொழிலாளர் – விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் கோவை மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜன் தலைமையில் கலந்து கொண்டனர். போலீசு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்தது.
தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
மதுரை :
26 நவம்பர் 2020 : நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்து மதுரையில் பல பகுதிகளில் நடந்த போராட்டங்களில் மக்கள் அதிகாரம் சார்பாக தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
சமயநல்லூர் பகுதியில் சரியாக காலை 10.30 அளவில் தொழிலாளர் உரிமை பறிக்கும் சட்டத்திற்கு எதிராகவும், வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராகவும் “மறியல் போர்” என்ற முழக்கத்தை முன்வைத்து சிபிஎம் தோழர் காளிதாஸ் அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம் பகுதியில் 10.30 மணி அளவில், சிபிஎம், சிபிஐ, சிஐடியு போன்ற தொழிற்சங்கங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் கலந்து கொண்டது.
சமயநல்லூர் பகுதியில் தோழர் ராமலிங்கமும் திருமங்கலம் பகுதியில் தோழர் குருசாமியும் கலந்து கொண்டு மக்கள் விரோத சட்ட திருத்தத்தை கண்டித்து தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்
ஒசூர் :
ஒசூர் பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு (NDLF) தோழர்கள் பங்கேற்றனர். INTUC, CITU, AITUC, LPF ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம், புதிய வேளாண் கொள்கைகள் குறித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இப்போராட்டத்தை ஒட்டி, ஒசூர் சிப்காட் 1&2 பகுதியில் சுவரொட்டி மூலம் விரிவான பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. போராட்டம் நடந்தபோது பெய்த மழை காரணமாக மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தகவல் : பு.ஜ.தொ.மு, ஒசூர்