தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், 7வது மைல் கிராமத்தை சேர்ந்த நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் 10.11.2021 மாலை 5 மணிக்கு நடைப்பெற்றது.
நினைவஞ்சலி கூட்டத்திற்கு தோழர். அருண் தருமபுரி மண்டல குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம் தலைமை தாங்கினார். தருமபுரி மாவட்ட புமாஇமு அமைப்பாளர் தோழர்.சத்தியநாதன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கோபிநாத் ஆகியோர் புரட்சிகர இயக்கத்தில் தோழர் மாது ஆற்றிய பங்கு குறித்து நினைவேந்தல் உரையாற்றினர்.
This slideshow requires JavaScript.
தியாகத் தோழர் மாது அவர்களிடமிருந்து புரட்சிகர மாண்பையும், நக்சல்பாரி தியாக உணர்வையும், உழைக்கும் மக்கள் மீதான அன்பையும் நாமும் கற்றுக் கொண்டு கடைபிடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
97901 38614
Related