PP Letter head

முன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவிப்பு ! விவசாயிகளின் தொடர்போராட்டத்திற்கு பணிந்தது, பாசிச மோடி அரசு!

பத்திரிகை செய்தி 

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மோடி அரசு பாராளுமன்றத்தில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டத்தை நிறைவேற்றி ஓராண்டு நிறைவுறும் நிலையில் இதற்கு எதிரான போராட்டமும் வரும் நவம்பருடன் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் இன்று (19.11.2021) பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாகவும், குறிப்பாக இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை விளைவிப்பதாக இருந்தாலும் சில விவசாய சங்களுக்கு தங்களால் புரியவைக்க முடியாத காரணத்தால் இந்த சட்டத்தை வாபஸ்பெறுவதாக கூறியுள்ளார், மோடி.

விவசாயிகளின் போராட்டத்தால் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை மறைத்துக்கொண்டு தாங்கள் இப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள்தான் என்று நாடகமாடுகிறார், பாசிச மோடி. பிரதமரின் இந்த அறிவிப்பை கூட நம்ப முடியாது என்று சில விவசாய சங்கங்கள் வரும் நவம்பர் 29ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரில் அதிகாரபூர்வமாக சட்டமாக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனினும் பாசிச மோடி அரசை விவசாயிகளின் போராட்டம் பணியவைத்துள்ளது என்பதே உண்மை.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் என்பது இந்திய விவசாயிகள் போராட்டத்தில் முத்திரை பதித்த மாபெரும் போராட்டம். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உபி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடும் குளிரிலும் மழையிலும் வெயிலிலும், கொரானா பெருந்தொற்று காலகட்டத்திலும் தனது உயிரை துச்சமாக மதித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்தில் இதுவரை 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது இன்னுயிரை ஈந்துள்ளனர். இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராடிய விவசாயிகள் மற்றும் ஜனநாயக சக்திகள், அமைப்புகள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் போட்டுள்ளன மத்திய மாநில அரசுகள்.

படிக்க :

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?

உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி !

11 முறை பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை வஞ்சித்து விவசாயிகள் மீதே பழி போட்டு ஈவு இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டது ஒன்றிய அரசு.
எதற்கும் பணியாத விவசாயிகள் அம்பானி அதானியின் கிடங்குகளை பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட்டு போராடினர், பா. ஜ. கட்சியினரை, அமைச்சர்களை விவசாயிகளின் அனுமதியின்றி ஊருக்குள் நுழைய விடாமல் அரியானாவில் பெரும் போராட்டம் நடந்தது. இந்த மூன்று மாநிலங்களில் மட்டுமின்றி நாடு முழுவதும் அரசியல் ரீதியில் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தது.

பல மாநில அரசுகள் இந்த விவசாயிகளின் ஆதரவாக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றின. இந்த நெருக்கடியை தாங்கமுடியாமல் கார்ப்பரேட் கைக்கூலியாக செயல்படும் பாசிச மோடி அரசு, அடாவடியாக நடந்துகொண்டது. இந்த ஆத்திரத்தில்தான் உபி லக்கிம்பூர் கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி நசுக்கி கொல்லும் அளவிற்கு தனது ஆத்திரத்தை காட்டியது பாஜக பாசிச கும்பல்.

அரியானாவில் பாஜகவினரை ஊருக்குள், கோயிலுக்குள், நுழைய விடாமல் நடந்துவரும் போராட்டங்கள், நடக்க இருக்கும் மூன்று மாநில் தேர்தல்கள், ஓராண்டு போராட்டம் நிறைவுறும் நிலையில் அடுத்தடுத்த விவசாயிகளின் போராட்ட அறிவிப்புகள் பாசிஸ்ட்டுகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இதுதான் மோடி அரசு இச்சட்டத்தை திறும்ப பெறுவதாக அறிவித்துள்ளதற்கு காரணம்.
வீரம் செறிந்த தொடர் போராட்டம் மட்டுமே பாசிஸ்டுகளை பணியவைக்கும் என்பதற்கு இப்போராட்டம் ஓர் படிப்பினை.

தேர்தல் மூலம் மட்டுமே பாசிஸ்டுகளை முறியடிக்க முடியும் என்று ஒரு புறமும், தேர்தலையும் ஒரு கருவியாக பயன்படுத்தினால் மட்டுமே பாசிஸ்டுகளை வீழ்த்த முடியும் என்று மறுபுறம் கதைப்பதும் தவறானது என்பதை நிரூபிக்கும் படிப்பினை ஆகும். விடாப்பிடியாகவும், தொடர்ச்சியாகவும், புதிய புதிய முறைகளிலும் எந்த அளவிற்கு நாம் போராடுகிறோமோ அந்த அளவிற்குதான் வெற்றி கிடைக்கும், முன்னேற முடியும் என்பதை இப்போராட்டம் கற்றுக்கொடுத்துள்ளது.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்-ற்கு எதிரான போராட்டம், பெட்ரோல் – டீசல், கேஸ் விலைவுயர்வுக்கு எதிரான போராட்டங்கள் உழைக்கும் மக்களின் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள், தற்போதய இந்த விவசாயிகளின் போராட்ட முறைகள், போராட்ட படிப்பினைகளை வரித்துக்கொண்டு அவற்றை உயர்த்தி பிடிப்போம்!

விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் தியாகத்தையும், போராட்ட வழிமுறைகளையும் உயர்த்தி பிடிப்போம்.!

காவி- கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும்வரை போராடுவோம்..!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை
கைப்பேசி : 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க