முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு || மக்கள்...
எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு || மக்கள் அதிகாரம்
தமிழக அரசு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும், எழுவரையும் உடனே விடுதலை செய்வதற்கான ஆணை வெளியிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று போராடியவர்கள் கைது செய்யப்படுவது அராஜகமான நடவடிக்கையாகும். உடனே தமிழக அரசு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களையும் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள எழுவரையும் உடனே விடுதலை செய்வதற்கான ஆணை வெளியிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.







