PP Letter head
பத்திரிகை செய்தி
06.11.2021
திரிபுரா : பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக துணை நின்றால் ஊபா சட்டம் !
காவி பாசிஸ்டுகளின் இந்துத்துவ சோதனைச்சாலையானது திரிபுரா!
திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து உண்மை அறியும் குழுவில் இருந்த இரண்டு வழக்கறிஞர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் நடைபெற்று வரும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை குறித்து பி.யூ.சி.எல் சார்பில் உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஹஸ்மி, ஸ்ரீவட்சவ், என்.சி.எச்.ஆர்.ஓ அமைப்பின் அன்சார் இந்தோரி, சி.பி.ஐ. (எம்.எல்) வழக்குரைஞர் முகேஷ் ஆகியோர் அப்பணியில் ஈடுபட்டனர்.
இக்குழுவினர் திரிபுரா வன்முறை தொடர்பாக டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.அதனை தங்களது முகநூலில் நேரடியாக ஒளிபரப்பும் செய்து உள்ளார்கள்.
படிக்க :
திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !
திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !
“அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் உள்ள பொய்யான கருத்துக்களை உடனடியாக சமூகவலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்று திரிபுரா மாநிலம் மேற்கு அகர்தலா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இரு வழக்கறிஞர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் ஊபா உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
திரிபுராவில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான அரச பயங்கரவாதமே இந்த வழக்கு.
எல்லா முனைகளிலும் பாசிச ஆட்சியை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு எதிராக வெற்றுச் சொல்லாடல்களும் வீன் பேச்சுக்களும் ஒருபோதும் பயன் தரப்போவதில்லை. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை எந்த அளவுக்கு கட்டி முன்னேறுகிறோமோ அந்த அளவுக்கு பாசிஸ்டுகளை வீழ்த்தமுடியும் என்பதுதான் உண்மை. அதற்கான முன்னெடுப்புகளே நம்முடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க