திரிபுரா : அதிகாரத் திமிரில் விவசாயிகளை தாக்கும் காவி பாசிஸ்டுகள்!

விவசாயிகள் இடது முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது, அப்படி ஆதரவு தெரிவித்தால் இதுதான் கதி என்று பா.ஜ.க குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.

ரண்டாவது முறையாக திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல் சி.பி.எம் ஊழியர்கள் மீதும், அலுவலகங்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களின் மீதும் இடைவிடாது தாக்குதல் தொடுத்து வருகிறது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 2 முதலாகவே இத்தாக்குதல் தொடர்கிறது. சி.பி.எம் ஊழியர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள் சங்கம் மீதும் கொடூரத் தாக்குதலை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தொடுத்து வருகிறது.

மார்ச் 27 அன்று கோவாய் மாவட்டத்தில் விவசாயிகள் மீது மிகப்பெரும் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கிலடலி பகுதியில் வசிக்கும் நிவேஷ் சர்கார் என்ற விவசாயியின் பவர் டிரில்லர் இயந்திரத்தை எரித்துள்ளனர். அன்றே, விவசாயிகளின் மீன்தொட்டிகளில் விசம் கலந்து மொத்த மீன்களும் இறந்து போனதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். ஏழை விவசாயிகளின் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

படிக்க : திரிபுரா தேர்தல்: பாசிசத்தின் புதிய மாடல்!

விவசாயிகள் இடது முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது, அப்படி ஆதரவு தெரிவித்தால் இதுதான் கதி என்று பா.ஜ.க குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற தனது காவி பாசிசத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே திட்டமிட்ட முறையில் பாசிச குண்டர் படைகளின் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் வாழ முடியாது என்ற அச்ச உணர்வை ஊட்டவே இவ்வளவு திமிராக விவசாயிகளைத் தாக்குகிறார்கள், காவி பாசிச குண்டர்கள்.

திரிபுராவில் இன்று நடப்பது, நாளை நாடு முழுக்க இருக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும். இதோ தங்களின் ஆதிக்கத்துக்கு அடங்காத தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அறிவிப்பாணை வெளியிட்டு எக்காளமிடுகிறது மோடி – அமித்ஷா கும்பல்.

புதிய வேளாண் சட்டத்திற்கெதிராக டெல்லியில் கோடிக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின்போது விவசாயிகளின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறிய மோடி கும்பல் இன்று வரை நிறைவேற்றாமல் நயவஞ்சகமாக இழுத்தடித்து வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனே தனது லட்சியமாக கொண்டு இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், இயல்பாகவே விவசாயிகளை தனது எதிரியாக கருதுகிறது.

படிக்க : திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?

இத்தகைய விவசாயிகளின் விரோதிகளை சட்டப்பூர்வ வழிமுறைகளில் வீழ்த்த முடியும், தண்டிக்க முடியும் என்று யாராவது எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தங்கள் ஊருக்குள் நுழையக் கூடாது, நுழைந்தால் ஓட ஓட விரட்டுவோம் என்று விவசாயிகள் போராட்டத்தின்போது, பஞ்சாப் விவசாயிகள் தீர்ப்பு எழுதினார்களே, அதைப்போல் நாடு முழுவதும் விவசாயிகள் இந்தக் கேடுகெட்ட மிருகங்களை விரட்டியடிக்க வேண்டும். எந்த ஊரிலும் நுழைய முடியாதவாறு செய்ய வேண்டும். அதற்கான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

அய்யனார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க