பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவதற்காக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
‘குரல் வாக்கெடுப்பு வளர்ச்சி நாயகன்’ மோடியின் பரிந்துரையின் பேரில் பெண்களின் திருமண வயதை மறுபரிசீலனை செய்ய, சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தலாம் என பரிந்துரை செய்ததாகவும், அதனால் தான் இந்தச் சட்ட மசோதா திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறிவருகிறது மோடி கும்பல். மோடி தலைமையிலான அமைச்சரவை இந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
படிக்க :
♦ தலாக் – ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !
♦ பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !
இந்து திருமண சட்டம், (1955), இந்திய கிருத்துவ திருமணச் சட்டம் (1872) ஆகிய இரண்டுமே பெண்ணுக்கு 18 வயதையும் ஆணுக்கு 21 வயதையும் திருமண வயதாக வரையறுத்துள்ளன. இஸ்லாமிய தனிஉரிமை (ஷரியத்) சட்டத்தின்படி ஆணும், பெண்ணும் வயதுக்கு வந்துவிட்டால் திருமணத்திற்கு தகுதியானவர்கள் என்று வரையறுத்துள்ளது. இதன்மூலம் 1954-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி, பெண்ணுக்கு 18-ம் ஆணுக்கு 21-ம் என்ற வரையறை மீறப்படுகிறது. எனவே அனைத்து மதங்களுக்கும் திருமண வயதை ஒரே மாதிரி (21-ஆக) இருபாலரும் கடைப்பிடிப்பதற்கேற்ப சட்டத்திருத்தம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது மோடி அரசு.
இத்துடன் பெண்கள் அதிகாரம் பெறுவதையும், பாலின சமத்துவத்தைப் பெறுவதையும், கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இச்சட்டம் என்றும் அறிவித்துள்ளது.
இச்சட்டத் திருத்தத்தை மீறி திருமணம் செய்வது சட்டவிரோதம் என்பதோடு செல்லத்தக்கவையும் அல்ல. இதையும் மீறி நடத்தும் பட்சத்தில் அப்பெண் 21 வயது முடியும் வரை பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைப்பதோடு – அதாவது சிறை வைப்பதோடு – திருமணம் நடத்துபவர்களும் தண்டிக்கப்படுவார்கள்.
இந்த திருமண சட்டத் திருத்தத்தை ஏற்பவர்கள் வளரும் பருவத்தில் கர்ப்பமாவது, இதனால் உடல்நலப் பாதிக்கப்படுவது; மகப்பேறு இறப்பு; சிசு இறப்பு ஆகியவை தடுக்கப்படுவதோடு, பெண்ணின் கல்வி வளச்சிக்கும் எதிர்காலத்துக்கும் நல்லது என்ற வகையிலும் வலியுறுத்துகின்றார்கள்.
எதிர்ப்பவர்கள், இந்த சட்டத் திருத்தம் தேவையற்றது; அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 25-ஐ மீறுவதால் இது சட்ட விரோதமானது; தனி நபர்கள் மீதான தாக்குதல்; குறிப்பாக இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது; அவர்களை குறிவைத்தே கொண்டு வரப்பட்டுள்ளது என்கிறார்கள். மேலும் சாதி கடந்த காதல் திருமணங்கள் நடப்பதை தடுப்பதற்கும் ஏதுவாகவே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
18 வயதில் வாக்களிக்கலாம், வாகனம் ஓட்டலாம், கல்லூரிக்குச் செல்லலாம் என்ற நிலையில்
முன்னர், பெண்களுக்கு திருமண வயதை 18-ஆக திருமண சட்டம் வரையறுத்தப் பிறகும்; மேலும் 18 வயதுக்குட்பட்டு திருமணம் செய்தால் 2 ஆண்டு சிறை; 1 லட்சம் அபராதம் என்று சட்டம் இருந்தும் இதுவரை 18 வயதுக்குட்பட்ட திருமணங்கள் தடுக்கப்படாமலும் தண்டிக்கப்படாமலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமியருக்குத் திருமணம் செய்து வைப்பவர்கள் இதுவரை தண்டிக்கப்படாத நிலையில், மக்களுக்கும் சட்டம் பற்றி தெரியாமலிருப்பது ஒருபுறமும், தெரிந்தாலும் அது நடைமுறையில் மீறப்படுவது மறுபுறமும் இருக்க திருமண வயதை 21-ஆக ‘சட்டப்படி’ உயர்த்துவது எவ்விதத்திலும் பலனைத் தராது என்பது சங்க பரிவாரக் கும்பலுக்கு நன்றாகத் தெரியும்.
ஆகவே இந்தச் சட்டத் திருத்தம், குறிப்பாக சிறுபான்மையினரை பழிவாங்குவதற்கும், பொது சிவில் சட்டத்திற்கு முன்னோட்டமாகவும் கொண்டு வரப்படுகிறது என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.

ஆணுக்கு எதிர் பெண்கள் கிடையாது…
பெண்களுக்கு எதிர் ஆண்கள் இல்லை.. அப்படியான தோற்றத்தை உருவாக்குவது கார்பரேடும் அரசும் தான் இவர்களுக்கு எதிராக தானே போராட வேண்டும்
கட்டுரையில் வரும் “திருமண வயது 18-ஆக இருந்தபோதும் கல்லூரி செல்லும் பெண்களின் சதவிதமோ 1% கூட இல்லை என்பதே இன்றைய நிலை” என்ற புள்ளிவிவரம் தவறானது.
நன்றி ! தவறுக்கு வருந்துகிறோம். திருத்தப்பட்டுவிட்டது.
பெண்பிள்ளைகளை நல்லவிதமாக/ஒழுக்கமாக வளர்த்து திருமணம் செய்துவைத்து கத்தியில் மீது நடப்பது போல உள்ள காலத்தில்18 ஐ 21 ஆக உயர்த்தியது மிகவும் மோசமான விடயம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பாசிச ஆட்சியில் பெண் பிள்ளைகளை இன்னும் 3 ஆண்டுகள் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி?
15 வயதிலேயே திருமணம் செய்தால் நல்ல பாதுகாப்போடு இருக்குமா
சாதக பாதகம் குறித்து எந்தவித தர்க்க ரீதியான விளக்கமும் இல்லாமல். பொத்தாம் பொதுவாக அரசியல் நிலைப்பாட்டில் இருந்து வெற்றுகட்டுரை வினவு தளம் வெளியிடும் என நான் எதிர்பார்க்கவில்லை
நண்பர் தம்மவேல் அவர்களுக்கு,
“பெண்களை போகப் பொருளாக்கி அவர்களின் உடலை ஆபாசமாக வர்ணிக்கும் வக்கிரப்புத்தியையும்; பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தையும், ஆணுக்கு பெண் அடிமை என்ற பெண்ணடிமைத் தனத்தையும் முறியடிப்பதை நோக்கமாகக் கொண்ட சமுதாயமும்
..பெண்களுக்கான கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, வருவாய் ஆகியவற்றுக்கான வழியை உருவாக்குவதும் அவர்களின் வாழ்வுரிமையை உத்தரவாதப்படுத்துவதோடு, ஆணுக்கு பெண் சமம் என்பதை உறுதி செய்ய வேண்டும்
..திருமண வயது 18-ஆக இருந்தாலும் சரி 21-ஆக இருந்தாலும் சரி பெண்களின் கல்வியிலும் வாழ்விலும் எந்த மாற்றமும் கடந்த கால நிகழ்கால பெண்களின் வாழ்நிலைமைகளை பரிசீலித்தாலே எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அதே வேளையில் இளம் பருவத்தில் திருமணம் செய்வது; ஆணும் பெண்ணும் வயதுக்கு வந்துவிட்டால் திருமணம் செய்வது; என்பதெல்லாம் அறிவியல் பூர்வமானது அல்ல.”
இவைதான் கட்டுரையின் தர்க்க முடிவு.
மாட்டு மூத்திரம், பிளாஸ்டிக் சர்ஜரி பிள்ளையார்,புகழ் மோடி அரசு, மொத்த சிவில் சமூக பெண்கள் நலன் பேசுவதாக சொல்வது என்பது,வறிய குடும்ப பெண்களுக்கு அரசே, கள்ளிப்பால் ஊத்துவதைத்தவிர வேறல்ல! எதிரிக்கு(முஸ்லீம்) இரண்டு கண்ணும் போக நாம் (இந்து) ஒரு கண்ணை இழப்பதுதான் தேசப்பற்று,அதுதான்,இராம இராஜ்ஜியம்.
ஜெய் ஹிந்!