றவுகளுக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகளிடம் உடல் குறைபாடு அதிகமாக இருப்பதில், நாட்டிலேயே தமிழகத்திற்கு இரண்டாம் இடம். முதல் இடத்தில் இருப்பது அருணாச்சல பிரதேசம்.

சரி… உறவுகளுக்குள் திருமணம் செய்வது மற்றும் அதனால் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரலாம் என்பதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

***

லகம் முழுவதும் ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் சொந்தத்தில் திருமணம் செய்வதை வளர்ந்த நாடுகளான அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், ஐரோப்பா , ஆஸ்திரேலியா காண முடிவதில்லை.

அரேபிய தீபகற்ப நாடுகள், தெற்காசிய நாடுகளில் தான் சொந்தத்தில் திருமணம் செய்யும் சதவிகிதம் மிக அதிகமாக இருக்கிறது

சரி எதற்காக சொந்தத்தில் திருமணம் செய்வது அதிகமாக இருக்கிறது என்று ஆய்வு செய்ததில்- சொந்தத்தில் திருமணம் செய்யும்போது ரிஸ்க் குறைவு;
திருமணம் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் இல்லை; மாப்பிள்ளை பொண்ணு இருவரையும் இருவருக்கும் முன்னமே நன்றாக தெரிந்திருக்கும்; அது போக மாமியார் கொடுமை, வரதட்சணைக் கொடுமை இவையெல்லாம் அந்நிய திருமணங்களை ஒப்பிடும் போது “comparatively” குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அடுத்த காரணம் சொத்து வெளியே போகாது. அந்நிய சம்பந்தம் செய்தால் சொத்து வெளியே போகும்.

சில நேரங்களில் குடும்ப மரியாதைக்காகவும் ஏற்கெனவே வாக்கு கொடுத்து விட்டதற்காகவும் சொந்த திருமணங்கள் நடக்கின்றன.

child-marriageபெண் குழந்தை பிறந்தவுடனே இந்த
பொண்ணு என் மகனுக்கு தான் என்று கூறும்
மக்கள் உள்ளனர். சிலர் பெண் பூப்பெய்தும் போது இப்படி கூறுவார்கள்.

இப்படியாக ஒரு சமூக அழுத்தம் காரணமாகவும் சொந்தத்தில் திருமணங்கள் அதிகரிக்கின்றன. யாரோ ஊர் பேர் தெரியாத ஆட்களை ப்ரோக்கர் சொல்கிறார் / மேட்ரிமோனி சொல்கிறது என்று நம்பி ரிஸ்க் எடுக்க யோசிக்கிறோம்.

நமது ஊர்களில் அதிகம் செய்யப்படும் சொந்தத் திருமணம், அக்கா மகள் மாமாவை திருமணம் செய்யும் முறை; அத்தை மகன்; மாமன் மகன்; அத்தை மகள் போன்றவர்களை திருமணம் செய்கிறோம். அக்காள் தங்கைகள் தங்களுக்குள் பெண் கொடுத்து எடுத்து சம்பந்திகள் ஆகுவதையும் பார்க்கிறோம்.

இஸ்லாமிய சமயத்தில் இந்த வகை ரத்த சொந்த திருமண முறை உண்டு. இதுபோன்ற திருமணங்களை ரத்த சொந்தமுள்ள திருமண முறைகள் என்று அழைக்கிறோம்.

சில ஊர்களில் அவர்கள் ஊரை விட்டு வெளியே பெண் எடுக்க மாட்டார்கள். கொடுக்க மாட்டார்கள். சில இடங்களில் தங்களின் கோத்திரத்தை சரியாக கடைபிடிப்பார்கள்.
இவ்வாறு சுய சாதிகளுக்குள்ளும் குலம் கோத்திரம் என்று உண்டு.

சில சாதிகளில் இது போன்ற ரத்த உறவுகளை தவிர்க்க ஒரு குலத்தில் இருப்போர் அதே குலத்தில் பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்கள். இவ்வாறு அவரவர் நம்பிக்கைப்படி திருமண பந்தம் செய்வதுண்டு.

படிக்க :
கல்விக் கடன் பயனாளிகளில் 10% மட்டுமே பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் | சாதிய அவலம்
குழந்தைத் திருமணம் ஏன் நடைபெறுகிறது?

மிக நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதால் வரும் பிரச்சனைகள் என்னவென்றால் ?

பிறக்கும் குழந்தை பிறவி குறைபாடுடன் பிறக்கும் சதவிகிதம் சொந்த திருமணங்களில் செய்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது.

மேலும், பிறக்கும் குழந்தைகளிடம் மரபணுக்கோளாறால் விளையும் X க்ரோமோசோம் சம்பந்தப்பட்ட ஆட்டோசோமல் ரிசசிவ் வியாதிகள் அதிகமாக தென்படுகின்றன.

பொதுவாக மரபணு ஆராய்ச்சி கருத்துப்படி, ஒரு நோய் உண்டாக்கும் காரணியான ஜீனை நோயை மட்டுப்படுத்தும் ஜீன் வென்று விடும். ஆனால், தாய் தந்தை ஆகிய இருவருமே நெருங்கிய ரத்த சொந்தங்களாக இருப்பதால் அவர்களிடம் மரபணுக்கோளாறுக்கான மரபணுக்கள் வெளிப்படாமல் இருந்த நோய்கள் அவர்களின் வாரிசுகளுக்கு வெளிப்பட வாய்ப்புள்ளது.

சொந்தங்கள் திருமணம் செய்வதால் பிரசவங்களில் அதிக சிசு மரணங்கள் நிகழ்கின்றன என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள செம்புலப் பெயல்நீராரின் (40-வது பாடல்) கொண்டு முடிக்கிறேன்.

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” – என்று பாடுகிறார்

இதன் அர்த்தம் என்ன? தலைவியிடம் தலைவன் கூறுவதாக இந்த பாடல் பதிவாகிறது.

“என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன” என்கிறான்.

இதன் மூலம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே NON CONSANGUINOUS MARRIAGE அதாவது சொந்தம் தவிர வெளியே திருமணம் செய்யும் வழக்கம் நம்மிடையே இருந்து வந்துள்ளது தெரிகிறது.

Inbreeding எனப்படும் நமது சொந்தங்கள் நமது ஊர் நமது இனம் என்று திருமணம் செய்து கொண்டே சென்றால் பிரச்சனையை உருவாக்கும் மரபணுக்கள் வெளியே வரும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதை நாம் உணரவே இந்த பதிவு.

நன்றி

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க