PP Letter headபத்திரிக்கை செய்தி

07.01.2022

மீண்டும் ஊரடங்கு; மூடு டாஸ்மாக்கை! பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !

கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு நடக்கும் வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வாரத்தில் நான்கு நாட்கள் கோயில்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கெனவே ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் குறைந்து போயுள்ளதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்தச் சூழலில் பள்ளிகள் மூடப்படுவது என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். மீண்டும் ஷிப்ட் முறையில் பள்ளிகளை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா சுனாமியாய் பரவி வருவதால் பொது இடங்களில் தேவையின்றி கூடக்கூடாது என்று விளம்பரம் செய்து வரும் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக்கை மூடுவது பற்றி வாயே திறக்காமல் இருப்பது மிகப்பெரிய அநியாயம் ஆகும். கொரோனா பரவல் என்பது உண்மை என்றால் முதலில் மூட வேண்டியது டாஸ்மாக்கைதான். ஆகவே தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இல்லையென்றால் கடந்த ஆட்சியின் போது டாஸ்மாக்கை மூடாத எடப்பாடி அரசின் மீது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வைத்த விமர்சனங்களே இந்த ஆட்சிக்கும் பொருந்தும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மூடப்படாது. மக்கள் போராட்டங்களே டாஸ்மாக்கை மூடும் என்பதே மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

தோழமையுடன்
தோழர் சி வெற்றிவேல் செழியன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க