PP Letter head20.01.2022
பத்திரிக்கை செய்தி
முதலாவது கடலூர் மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
முதலாவது கடலூர் மண்டல மாநாடு 20.1.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் முறைப்படி தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மண்டலக் குழுவிற்கான தேர்தல், தேர்தல் அலுவலர்களான தோழர்கள் அமிர்தா, கோபிநாத் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மண்டலத்திற்கு ஐந்துபேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கடலூர் மண்டலச் செயலாளராக தோழர் முருகாநந்தம், இணைச் செயலராக தோழர் அசோக்குமார், மண்டலப் பொருளாளராக தோழர் சக்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதாச்சலம் கிளை செயலாளராக தோழர் அசோக்குமார், விஜயமாநகரம் கிளைச் செயலாளராக தோழர் தனசேகர், கடலூர் கிளைச் செயலாளராக தோழர் சக்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும்,
“காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!”
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன்
தோழர் முருகாந்தம்
கடலூர் மண்டல செயலர்
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 97912 86994

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க