தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பல் !
தொடரும் நீட்! ; கர்நாடகத்தில் ஹிஜாப்-க்குத் தடை!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தைக் கட்டியமைப்போம்!!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!!!
என்ற முழக்கங்களை முன்வைத்து பிப்ரவரி 14 அன்று விருத்தாசலம் பாலக்கரையில் அனைத்து இடதுசாரி கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதற்கு மக்கள் அதிகாரம் வட்டார செயலாளர் தோழர் அசோக் தலைமை தாங்கினார்.

This slideshow requires JavaScript.

சி.பி.ஐ. எம்.எல். லிபரேசன் கட்சியின் தோழர் ராஜசேகர், சி.பி.ஐ. எம்.எல். மக்கள் விடுதலை கட்சியின் தோழர் ராமர், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் (RMPI) தோழர் கோகுல்கிருஷ்டிபன், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ராமலிங்கம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தோழர் ராஜந்திரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தகவல் :

மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்,
9791286994.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க