மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்து திட்டத்தின் ஒரு பகுதியாக கடலூரில் மார்ச் 8 அன்று ஆர்ப்பாட்டம் ; திவாரூரில் மார்ச் 7 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்து திட்டத்தின் ஒரு பகுதியாக கடலூர் மற்றும் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை!
தில்லை இருப்பது தமிழ்நாடா?
அதற்குள் ஒரு தனி நாடா?
தமிழக அரசே!
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர சிறப்புச் சட்டம் இயற்று” என்ற முழக்கங்களின் கீழ் மார்ச் 8 அன்று காலை 11 மணியளவில் கடலூர் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் கடலுர் கிளை இணை செயலாளர் தோழர் இராமலிங்கம் தலைமை தாங்கினார்.
This slideshow requires JavaScript.
தோழர் மணிவண்ணன் சிதம்பரம் வட்டார அமைப்பாளர் ம.ஜ.இ.க,
தோழர் தி.ச.திருமார்பன் வழக்கறிஞர், மாநில அமைப்பு செயலாளர் வி.சி.க,
தோழர் தீனா அமைப்பாளர் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் புதுச்சேரி,
தோழர் வெண்புறா குமார் ஒருங்கிணைப்பாளர் கடலூர் அனைத்து பொதுநல இயக்கம்,
தோழர் பரிதிவாணன் தமிழர் கழகம்,
தோழர் முருகானந்தம் கடலூர் மண்டல செயலாளர் மக்கள் அதிகாரம்
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் கடலூர் கிளைப் பொருளாளர் தோழர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
000
7/03/2022 அன்று மாலை 6, மணியளவில் திருவாரூர் தாலுகா குளிக்கரை, கடைவீதியில் மக்கள் அதிகாரம், அமைப்பின் சார்பாக இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை! தில்லையில் இருப்பது தமிழ்நாடா ? இல்லை அதற்குள் ஒரு தனி நாடா ? தில்லை நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சிறப்பு சட்டம் இயற்று ! என்கிற முழக்கத்தை முன்வைத்தும், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் சிவபக்தை இலட்சுமியை சாதியை சொல்லி இழிவுபடுத்திய தீட்சிதர்களின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு கைது செய்ய வேண்டும் என்றும், தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் ஆசாத் அவர்கள் தலைமையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், த. சண்முகசுந்தரம் அவர்கள், ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர், செல்லத்துரை அவர்கள், தங்கராசு அவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொருளாளர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மத பிரச்சினைகள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் மதச்சார்பின்மை என்கிற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதை கண்டித்தும் விளக்கி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.