ஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை!
தில்லை இருப்பது தமிழ்நாடா?
அதற்குள் ஒரு தனி நாடா?
தமிழக அரசே!
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர சிறப்புச் சட்டம் இயற்று”
என்ற முழக்கங்களின் கீழ் மார்ச் 11 அன்று காலை 11 மணியளவில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் த. சண்முகசுந்தரம் தலைமையேற்றார்.
ஆரூர் சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ப. மோகன், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர், அருண் காந்தி திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர்,  புரட்சி நெப்போலியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஷேக் அப்துல்லா மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர்,  முரளி மாவட்ட பொருளாளர் மக்கள் அதிகாரம், கிருஷ்ணமூர்த்தி வேதாரண்யம் பகுதி செயலாளர் மக்கள் அதிகாரம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

This slideshow requires JavaScript.


மக்கள் அதிகாரம்
திருவாரூர் – 6374741279

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க