பாசிச மோடி அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மார்ச் 28,  29, ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மார்ச் 28, 29 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சிவா மக்கள் அதிகாரம், வட்டார துணைச் செயலாளர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
தோழர் முருகன் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பென்னாகரம் பொறுப்பாளர் அவர்களும், தோழர் கோவிந்தராஜ் சிபிஐ (ml )லிபெரேஷன். தர்மபுரி மாவட்ட செயலாளர் அவர்களும், தோழர். கருப்பண்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பென்னாகரம் தொகுதி செயலாளர் அவர்களும் கண்டன உரையாற்றினர்.

This slideshow requires JavaScript.

மேலும் தோழர் கோபிநாத், மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டல செயலாளர் அவர்கள் கண்டன சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக தோழர் சுந்தர், 7 வது மைல் கிளை செயலாளர், மக்கள் அதிகாரம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
தகவல்:
மக்கள் அதிகாரம்
தர்மபுரி மண்டலம்
9790138614
000
பாசிச மோடி அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மார்ச் 28,  29, ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது
திருவாரூரில் மார்ச் 28 அன்று AITUC, CITU, LPF, SKM, தொழிற்சங்கம் மற்றும் அமைப்புகளின்  ஒருங்கிணைப்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
மார்ச் 29 அன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர், ஆஷா பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பெருந்திரளாக கலந்து கொண்டார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்குபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில், நான்கு தொழிலாளர் நலசட்ட தொகுப்புகளைக் வாபஸ்பெற வேண்டும், நாட்டின் சொத்துக்களான எல்ஐசி, வங்கி, பி.எஸ்.என்.எல், ரயில்வே, தபால்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி நகர்ப்புறங்களுக்கு பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தி ஊதியத்தை ரூ.600-ஆக உயர்த்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்து, பி.எஃப் மூலம் குறைந்த பட்ச பென்சன் மாதம் ரூ.6000 வழங்கு அங்கன்வாடி மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்திடு, பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்திடு!, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்காதே! டெல்லி விவசாயிகளின் 13 மாத காலப் போராட்டத்தின்போது கோரிக்கைகளை ஏற்ற ஒன்றிய  அரசே, MSP உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று! கொரோனா காலத்தில் பணிபுரிந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.15,000 உரிய பாதுகாப்பு காப்பீடு வசதிகளும் வழங்கிட வேண்டும், மற்றும் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மருத்துவத்துறை, மற்ற துறைகளில் பணியாற்றும், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் சிறு குறு நடுத்தர தொழில்களையும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், பாசிச மோடி அரசை கண்டித்தும், சாலைமறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.
திருவாரூர்-6374741279
000
மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரறுப்போம்!” என்கிற முழக்கத்தின் அடிப்படையில் 29.3.2022 அன்று காலை 10 மணியளவில் வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தோழர் சுந்தர் (ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்) தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டக்குழு செயலாளர் தோழரும், மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினருமான தோழர் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். பேரணாம்பட்டு பகுதியின்  தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி தோழர் கிருஷ்ணன், மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணி தோழர் திலகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் : புதிய தொழிலாளி
000
திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மார்ச் 29  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கமான BPWU / NDLF சங்க தோழர்கள் பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் உத்திராபதி தலைமையில் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் : புதிய தொழிலாளி

000

மார்ச் 28, 29 வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக மார்ச் 29 அன்று மாலை 5 மணியளவில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டக் குழுக்களது செயலாளருமான தோழர் ம.சரவணன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
மணலி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (FMTU) அமைப்பின் தலைவர் திரு.அன்பு ராஜாராமன், பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன், மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டதும், இளம் தொழிலாளர்கள் பெருமளவு கலந்து கொண்டதும் காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் வீச்சை உணர்த்துவதாக இருந்தது.

This slideshow requires JavaScript.

தகவல் : புதிய தொழிலாளி.
000
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ! மார்ச் 28,29 நாடு தழுவிய பொது வேலை நிறுத்ததின்  ஒரு  பகுதியாக மார்ச் 29 அன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தொடர் முழக்கங்கள் போடப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
000
30.3.22
பத்திரிகை செய்தி
மார்ச் 28, 29-ம் தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழகத்தில் பரவலாக சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என்ற வடிவங்களில் தொழிலாளர்கள் தங்களின் உரிமை பறிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது இருபத்தி எட்டாம் தேதி சென்னை முழுவதும் ஒரு அரசு பேருந்து கூட ஓடவில்லை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் தனித்தும் பிற தொழிற்சங்கங்களுடன் இணைந்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றது.
இதில் எமது அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களும் திரளாக கலந்துகொண்டு பாசிச மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திருத்தங்களையும்,  பொதுத்துறையை விற்பதையும்  விலை வாசி உயர்விற்கு  எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைந்தது.
தோழமையுடன்,
வெற்றிவேல்செழியன்,
மாநில போராட்ட ஒருங்கிணைப்பு குழு,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்க்கள் கலை இலக்கியக் கழகம்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க