மிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடத்தும் ஆட்சியை திராவிட மாடலா? தேசிய மாடலா? என்று ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விவாதங்களில் தேசிய மாடலாக ஒரு தரப்பினரும் திராவிட மாடலாக ஒரு தரப்பினரும் பிரிந்து விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் கஞ்சா வியாபாரி, சத்குரு நடத்திய சிவராத்திரி போட்டியாக சென்னை மயிலாப்பூரில் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட சிவராத்திரி விழா, தருமபுர ஆதீன விவகாரத்தில் பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி அளித்தது, சென்னை ஆவடி அருகே பசுமடம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்தது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவி ஹிஜாப் அணிந்து 11-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதி மறுத்தது போன்றவை சங் பரிவாதத்தின் திட்டங்கள் நடைபெற்றுள்ளது.
திமுக செய்யும் செயலைப் பார்க்கும் பொழுது திராவிட மாடல் போர்வையில் இந்துராஷ்டிரா நடைபெறுகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அதை அம்பலப்படுத்தும் விதமாக இந்த கருத்து படம்.

‘திராவிட மாடல் ஆட்சி’யில் அரங்கேறும் சங் பரிவாரின் திட்டங்கள் ! | கருத்துப்படம்


கருத்துப்படம் : வேலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க