த்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவின் நிறுவனரான தோழர் சங்கர் குஹா நியோகி எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவராக இல்லாதிருந்தாலும், நன்கறியப்பட்ட மார்க்சிய – லெனினியவாதி ஆவார். 1977 முதல் சத்தீஸ்கரில் உழைக்கும் வர்க்க இயக்கத்தைக் கட்டினார்; தொழிலாளர்களின் ‘உரிமையுள்ள பங்கை’ கோரி, முதலாளிகளுக்கு எதிராகத் தீவிரமான தொழிற்சங்கப் போராட்டங்களை வர்க்கரீதியான வழியில் வழிநடத்தியதோடு மட்டுமின்றி, அதையும் தாண்டி செயல்பட்டவர். வள ஆதாரங்கள் நிறைந்த, ஆனால் பிற்படுத்தப்பட்ட பகுதியில், தொழிலாளர் விவசாயக் கூட்டணியின் (எனவேதான் சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவின் கொடி சிவப்பு – பச்சையாக இருக்கிறது).

தலைமைப் பொறுப்பில் உள்ள உழைக்கும் வர்க்கம், அந்தப் பகுதியில் அனைத்து உழைக்கும் மக்களின் போராட்டத்தின் (நியாயமான, சமத்துவமான – வளர்ச்சிக்காகத் தொழிலாளர்கள், விவசாயிகள், நகர்ப்புற ஏழைகள், கடை உரிமையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சிறுதொழிலதிபர்கள் கூட நடத்தும் போராட்டத்தின்) முன்வரிசைப் படையாக இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். பெருநிறுவன மேலாதிக்க சக்திகள், அவற்றின் புதிய நடுத்தரகர்கள், பெருநிறுவன கொள்கைக்கு வசதி செய்து தரும் அரசியல் சக்திகள் என்று ஆகப் பிற்போக்கான சக்திகளுக்கு எதிராகத் திரளுதல் என்பது அதன் அர்த்தம்.

படிக்க: பாட்டாளி வர்க்கத்தை அமைப்பதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

அந்த உறுதியான வர்க்கக் கண்ணோட்டத்துடன், உழைக்கும் வர்க்கத்தால் வழிநடத்தப்படும் தேசிய இயக்கம் ஒருபோதும் பிற்போக்காக மாறாது என்று தோழர் நியோகி நம்பினார்; உதாரணமாக, மஹாராஷ்டிராவில் சிவசேனா / எம்.என்.எஸ். இயக்கங்களைக் குறிப்பிட்டார். பிறப்பின் அடிப்படையில் இல்லாமல், வர்க்க நிலையின் அடிப்படையிலான அவரது வரையறையான ‘யார் சத்தீஸ்காரர்’ என்ற வரையறை இந்த வேறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. (உள்ளூரில் உள்ள அவரது உடனுழை தொழிலாளர் போலவே, இந்தப் பகுதியில் தனது வாழ்வாதாரத்தை ஈட்டப் போராடும் ஒரு புலம்பெயர் தொழிலாளிக்கும் இந்த சத்தீஸ்கர் சொந்தம்)

நியோகியால் சுரங்க நகரியமான துர்க் மாவட்டத்தில் உள்ள டல்லி ராஜ்ஹராவில் நிறுவப்பட்டு, தலைமை வகிக்கப்பட்ட தொழிற்சங்கம் வேலை நிலைமையை மட்டும் கவனிக்கும் எட்டு மணி நேர சங்கம் அல்ல; தொழிலாளர்களின் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கவனிக்கும் 24 மணிநேர சங்கம். சுகாதாரம், கல்வி கலாச்சாரம், சேமிப்பு, விளையாட்டு உட்பட 17 துறைகள் சங்கத்தில் இருந்தன.

11 பள்ளிகளை சங்கம் நடத்தியது; ஷாகித் (Shaheed) மருத்துவமனை என்ற மருத்துவமனையை நடத்தியது; சுரங்கங்களை சுற்றியிருந்த ஏழை கிராமப்புற மக்களுக்கு சேவை யாற்றும் முழுமையான சமூக மருத்துவமனையாக அது வளர்ச்சியுற்றது. தொழிலாளர்களிடையே குடிப்பழக்கம் நிலவுவதற்கு எதிராக அந்த பெண்கள் பிரிவான ‘மஹிளா முக்தி மோர்ச்சா’ வெற்றிகரமான போராட்டம் நடத்தியது.

ஓர் ஆக்கபூர்வ மாற்றாக ‘பாதி இயந்திரமய’ முறையை உருவாக்கி, நிறுவ சங்கம் போராடியது; அந்த வேலை வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது மட்டுமின்றி, சிக்கனமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கிறது என்று பிலாய் ஸ்டீல் நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்படும் அளவிற்கு, ஆஸ்திரேலியாவிலிருந்து கனரக இயந்திர சுரங்கக் கருவியை இறக்குமதி செய்வதை விட மேலதிக சுயச்சார்பு மாற்றப்பட்டது. சங்கத்தின் ‘விவசாயத்துறை’யில் சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா வளர்ந்தது.

தொழிற்சங்க இயக்கத்தை அதன் மையப் பணியாக வைத்துக்கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான கூட்டு அமைப்பாக அது கட்டப்பட்டது. டல்லி ராஜ்ஹரா சுரங்கத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கு மேலான கிராமங்களில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகப் பல வகையான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். தொழிலாளர் வர்க்க நலனுக்கு எதிரானது விவசாய வர்க்க நலன் என்ற கருத்தாக்கத்தை தோழர் நியோகி முழுவதுமாக முறித்துக் காட்டினார்; சித்தாந்த ரீதியில் மட்டுமின்றி, உயிரோட்டமான பெருந்திரள் மக்கள் பங்கேற்ற செயல்பாடுகள் மூலம் அவ்வாறு செய்தார்.

(இந்திய உழைக்கும் வர்க்கமும் அதன் எதிர்காலமும் என்ற நூலிலிருந்து…)

அலைகள் வெளியீட்டகம்
எண்: 5/1ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
கைபேசி: 9841775112
விலை: ரூ.330.00

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க