தமிழகத்தின் கிராமங்கள் வரை ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி! | ஜவாஹிருல்லா | வீடியோ

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், MLA ஜவாஹிருல்லா அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

மிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், MLA ஜவாஹிருல்லா அவர்கள் பேசிய உரையில், தமிழகத்திலே பாசிசத்திற்கு எதிராக, கார்ப்பரேட் கொடுங்கோன்மைக்கு எதிராக தொடர்ச்சியாக, சிறப்பான பரப்புரைகளை, மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து பல்வேறு போராட்டங்களை உங்கள் அமைப்புகளின் சார்பாக எடுத்துள்ளீர்கள்.

ம.க.இ.க-வின் சார்பாக வெளியிடப்பட்ட காவி இருள், அசுரகானம் ஆகிய ஒலிப்பேழைகளை மறக்க முடியாது. உங்கள் அமைப்பின் மாநாட்டில் பேச வாய்ப்பளித்தற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இங்கு பாசிசம் என்றால் என்ன? பாசிசத்தின் வடிவம் என்றால் என்ன? என்றும் இங்கே பேசியவர்கள் பேசியுள்ளனர். “பிரதமர் நரேந்திர மோதியும் அம்பேத்கரும்” என்ற புத்தக வெளியீடு விழாவில் ராம்நாத்கோவித் பேசுகிறார். அதில் பிரதமர் மோடிதான் உண்மையாக பின்பற்றுபவர் என்று நூல் வெளியீட்டு விழாவில் ஒரு சான்றிதழை கொடுக்கிறார்.

பாசிசம் பொய்மைகளை உண்மையாக நம்ப வைத்து மக்களை தன் வயப்படுத்த கூடிய ஒரு செயல்திட்டம் உடையது. பாபா சாகேப் அம்பேத்கர் வர்ண பேதங்களுக்கு எதிராக போராடினாரோ, அதற்கு நேரதிரான கொள்கையை மோடியை உண்மையிலேயே பின்பற்ற கூடியவர் என்று சொல்கிறார்.

மோடி அவர்களின் ஆட்சியில் 2021 ஆண்டு மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் 7818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. உ.பி.யில் மட்டும் தலித்துக்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை வழக்குகள் 61,000 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டிருக்கின்றது. ஹத்ராஸ் 19 தலித் சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நிதியில்லை. அப்படிப்பட்ட மோடியை அம்பேத்கரை பின்பற்றக் கூடியவர் என்று சொல்கிறார்கள் சங்கிகள்.

தமிழ்நாடு என்பது பெரியார் மண்தான். மாற்று கருத்தில்லை. ஆனால், கிராமங்கள் வரை பாசிசம் ஊருடுவியிருக்கிறது. விழுப்புரத்தில் ஆய்விற்கு சென்றபோது, ஒரு பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் உங்களுக்கு எத்தனை நாட்கள் வேலை கிடைக்கிறது என்று விசாரித்தோம். 100 வேலைத்திட்டத்திற்கு பெயர் என்ன? யார் கொண்டு வந்தது என்று கேட்டால்? அந்த பெண்கள் மோடி கொண்டு வந்தார் என்கின்றனர். அவர்கள் எப்படி கிராமப்புறங்களில் கூட ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

பாசிஸ்டுகளின் நோக்கம் உயர்சாதி, ஆதிக்கச் சாதிகளை தவிர மற்றவர்களை அடிமையாக்குவதுதான். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்ட வேண்டும். பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் களைந்து நன்கு ஒருங்கிணைத்து எதிர்க்க வேண்டும். மனித நேய மக்கள் கட்சி உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம் நன்றி என பேசினார்.

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், MLA ஜவாஹிருல்லா அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க