சென்னை பெரியமேடு பகுதிக்கு அருகில் உள்ள அமைந்துள்ளது கண்ணப்பர் திடல் எனும் பகுதி. இங்கு வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி, மோசமான வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பலமுறை அரசிடம் மனுகொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு கட்டும் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பணம் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் கண்ணப்பர் திடல் மக்கள்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
இதுவரை உலகம் கண்ட பாசிஸ்ட்டுகளின் வதைமுகாம்கள் மொத்தமாக,சென்னையில் … நம் அருகில்.
இது ஏதோ வார்த்தைக்காக சொல்லவில்லை.
உண்மையில், திறந்தவெளிச்சிறைச்சாலை,தீண்டா நகரம் இப்படி எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாத குரூரம் இது.
கண்ணப்பர் திடல் எங்கோ இல்லை.சென்னை மேயரின் நாற்காலியில் இருந்து, கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது.
தற்போதைய முதல்வர் ஸ்டாலின், 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார்.
இதற்குமேல் இதில் என்ன சொல்வது?
இந்த காணோளியை பாருங்கள். நீங்களே ஆட்சியாளர் முகத்தில காறிதுப்புவீர்.
.. ஆனால்.. முழுமையாக.. பார்க்கமுடியவில்லை.மனது வலிக்கிறது.
https://youtu.be/I4q5wYnCDkc