1965 இந்தி எதிர்ப்புப் போர்: நெஞ்சை உலுக்கிய உண்மை சம்பவம் | தோழர் மருது | வீடியோ

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றி பல்வேறு கருத்துக்களை தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

தமிழ்நாட்டின் பண்பாடான ஆரிய பார்ப்பன வேத எதிர்ப்பு மரபை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். திருவள்ளுவர், மருது சகோதரர்கள், இம்மானுவேல் சேகரன் உட்பட அனைவருக்கும் தற்போது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவாரக் கும்பல் காவிசாயம் பூசுகிறது. அதை முறியடித்து இந்த நாட்டை காக்க, மண்ணைகாக்க யாரேல்லாம் போராடினார்களோ அவர்களுடைய வரலாற்றை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சொல்லிகொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு ஏற்பட்ட மானக்கெட்டின் விளைவாக கேரள ஆளுநர் அம்மாநில அரசு எழுதி கொடுத்த உரையை அவர்மீது உள்ள விமர்சனத்தையும் சேர்த்து வாசித்துவிட்டு கடந்து சென்றார். இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் தமிழ்நாட்டு மாணவர்கள் – இளைஞர்களின் பங்கு என்பது அளவிட முடியாதது. உணர்வுபூர்வமானது. தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் என அனைத்தையும் காப்பற்றுவதற்காக நூற்றுக்கணக்கானோர் உயிர்விட்ட வரலாறு, உலகில் எந்த தேசிய  இனத்திற்கும் இல்லை.

இப்போது வேறும் மொழிப்போராட்டம் மட்டும் பயனளிக்குமா என்றால் இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. ஏன் என்றால் இன்று இந்திமொழி ஆதிக்கத்தோடு ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே மதம் என்ற பாசிச ஆட்சியை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி நிறுவத் துடிக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாடு அம்பானி – அதானி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது.

1968-ல் தமிழ்நாடு மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது கேரளா, ஆந்திரா, மேற்குவங்கம் என பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரனமாக திகழ்ந்தது. எங்கு நாடு பிளவுண்டு போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் அன்றைய மத்திய அரசு பின்வாங்கி கொண்டது. இன்று அதுபோன்ற போராட்டத்தின் தேவை அதிகரித்திருக்கிறது.

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றி பல்வேறு கருத்துக்களை தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க