ஆதிக்க சாதி வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்! | தோழர் அமிர்தா வீடியோ

மீபகாலமாக தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியர்களுடைய வெறியாட்டம் என்பது அதிகரித்திருக்கிறது. இதை கண்டிக்க வேண்டியதும் அதை கண்டித்து அதற்கு எதிரான செயல்களை செய்ய வேண்டிய அவசியமும் இன்று அதிகமாக ஏற்பட்டுள்ளது. சென்ற மாதம் 16ஆம் தேதி போல் புதுக்கோட்டை வேங்கைவையல் கிராமத்தை ஒட்டிய இறையூர் கிராமத்தில் அங்கு வசிக்கக்கூடிய பட்டியலின மக்கள் குடிக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில மலம் கலக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதி கும்பல் செய்து இருக்கிறது. இதை தொடர்ந்து சில நாட்களாக அந்த தண்ணீரை குடித்த அப்பகுதி தலித் மக்கள் தொடர் உடல் உபாதைகளுக்கு உள்ளார்கள். பக்கத்தில் இருக்கக்கூடிய புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள் மக்களுக்கு தொடர்ந்து உடம்பு சரி இல்லாமல் போவதால், தண்ணீரில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னதன் விளைவாக அந்த தொட்டியை பார்க்க நேரிட்டது.‌ தண்ணீர் முழுவதுமே மஞ்சள் நிறமாக மாறியிருக்கிறது. திட்டமிட்டு ஒரு கும்பல் கூடை கூடையாக மலத்தை கொண்டு கொட்டி இருக்கிறது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான மனித இனத்திற்கு எதிரான ஒரு செயல்.

இதன் பின்பு அங்கு இருக்கக்கூடிய மக்கள் உளவியல் ரீதியாக அதிகப்படியாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.‌ தண்ணீரையே குடிக்க முடியவில்லை என்று அம்மக்கள் கூறுகின்றனர். சாதாரண தினக் கூலிகளாக இருக்கக்கூடிய ஏழை எளிய தலித் மக்கள் மீது இத்தகைய ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க