மோடி உரை: பாசிச பாராளுமன்றம்! | தோழர் அமிர்தா வீடியோ

மோடி என்கிற பிம்பம் வீழ்த்தப்பட அழிக்கப்பட முடியாத ஒரு பிம்பமாக வளர்ந்து நிற்கிறது. ராஜ்யசபா கூட்டத்தில் கிட்டத்தட்ட 1¾ மணி நேரம் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் அதானி பற்றி பேசக் கோரி உரக்க அமலிகளில் ஈடுபட்ட போதும் கூட “நான் இந்த நாட்டுக்காகத் தான் இருக்கின்றேன்; எனக்கு குடும்பமே இல்லை” என்று பாசிஸ்டுகள் பேசக்கூடிய தொணியில் பொய்யாக பேசினார். கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்வது என்பது அவரது அகராதியிலேயே கிடையாது. பொய் சொல்வது, கேள்வி கேட்பவர்களுடைய தகுதி என்ன என்று மாற்றி பேசுவது, இதன் மூலமாக தன்னை தக்க வைத்துக் கொள்வது; இதுதான் மோடியின் வழக்கம். அதானியின் நண்பரா நீங்கள் என்று கேட்டால், தேசநலன் என்று பேசுவது; அல்லது பொதுவான ஒரு எதிரியை முன்னிறுத்தி தன்னை தற்காத்துக் கொள்வது என்பது அவருடைய நடைமுறை.

இந்த அரசியலமைப்பு சட்டத்திற்குள்ளேயே நின்று அதை பாதுகாப்பதன் மூலமாக பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கும்பலை அழித்துவிட முடியும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கிறார்கள். இந்த அரசியலமைப்பை வைத்துக்கொண்டே, சட்டத்தை வைத்துக் கொண்டே இந்திராஷ்டத்தை அமைத்துவிட முடியும் என்பதுதான் 8 ஆண்டுகால பி.ஜே.பி ஆட்சியின் அனுபவம். இதை பாதுகாப்பதன் மூலமாக அவர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

எதிர்க்கட்சிகளின் மௌனம் என்பதுதான் இன்று ஒரு அவலமாக இருக்கிறது. ஜனநாயக சக்திகளாகிய நாம் ஒரு அணியில் திரள வேண்டியிருக்கிறது. பாசிசத்திற்கு மாற்றாக பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்பதற்கான திட்டங்களை முன்வைப்பதன் மூலமே அவர்களை வீழ்த்த முடியும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க