சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | காணொலி

இது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்.
சித்தர்கள், வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த மண்.
பெரியார் தன்மான படை வளர்த்த மண்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என உலகுக்கு
உரைத்த மண்.
கீழடியும் ஆதிச்சநல்லூரும் நமது மரபு.

பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன்,
வேலுநாச்சியார், மருதுசகோதரர்கள், சின்னமலை,
சுந்தரலிங்கனார், அழகுமுத்துக்கோன்,
வ.உ.சி., சிங்காரவேலர்…
உறுதிமிக்கது நமது விடுதலைப் போராட்ட உணர்வு.

தனித்தியங்கும் தமிழ்நாட்டின் இம்மரபுகள்தான்,
ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக் கொடுங்கனவு.

தொழிலாளர் வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை
நிறைவேற்றிய போராட்ட தினமான
மே தினத்தில் உறுதியேற்போம்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க