தூத்துக்குடி விஏஓ கொலை: மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளை பாதுகாப்போம்! || தோழர் மருது

தூத்துக்குடி வி.ஏ.ஓ படுகொலை என்பது நேர்மையான, மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அரசுக்கட்டமைப்பில் இதுபோன்ற குறைந்தபட்ச நேர்மையான அதிகாரிகளுக்கு கூட வேலையில்லை என்பதும் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் கண் முன் நாம் காணும் உண்மை.

வி.ஏ.ஓ போலீஸ்காரர்களிடம் மணல் திருட்டை தடுக்ககோரி மனு கொடுத்தது எப்படி அந்த மணல் திருட்டு கும்பலுக்கு தெரியும்? அப்படியானால் அரசு உயர் அதிகாரிகள் முதல் போலீஸ்துறை வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் அக்கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டதாகத்தான் பொருள்படுகிறது.

தற்போது தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி போராடும் வி.ஏ.ஓ சங்கம் எத்தனை மக்களுடைய சரியான போராட்டங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறது.

நேர்மையான அதிகாரிகளை இந்த அரசு கட்டமைப்பு ஒருபோதும் காப்பாற்றாது. சாதாரண மக்களாகிய நாம்தான் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அப்படி அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம்தான் குறைந்தபட்சம் இயற்கை வள கொள்ளைகளுக்கு எதிராகவும் ஊழல் லஞ்சம் முறைகேடுகளுக்கெதிராகவும் போராடி வெற்றி காண முடியும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க