புதிய நாடாளுமன்றம் – யாருக்கு இது? | கவிதை

உன்னை தேர்ந்தெடுத்த - நாங்கள் பஞ்சத்தில் வாட நீ-லஞ்சத்தில் எங்களை வேட்டையாட கட்டுகிறாய் ஒரு கோட்டை.

கவிதை 1: யாருக்கு இது ?

வீசும் காற்றுக்கு,
விழும் ஓலை வீடு,
குரல் கொடுக்க யாருமில்லை.

கொழுத்தவன், இழைத்தவனை
விழுங்குவதை கேட்க – நாதியில்லை.

நாயாய் நாங்கள் நடந்து- கால்கள்
தேய்ந்த பின்னும் எதிர்பார்க்கும்
முதியோர் ஊக்கத்தொகை
கொடுக்க துப்பில்லை.

பட்டினியில் வாடும்
மக்களின் நிலை போக்க
பணமில்லை -ஆனால்.

உன்னை தேர்ந்தெடுத்த – நாங்கள்
பஞ்சத்தில் வாட
நீ-லஞ்சத்தில்
எங்களை வேட்டையாட கட்டுகிறாய்
ஒரு கோட்டை.

நந்தி வைத்த செங்கோலை – கண்டு
சந்தி சிரிக்கும் – உன்னை
முந்தி அடிக்கும்.
நினைவு கொள் இந்துராஷ்டிரமே.

வாரிக் கொடுக்கும்
என பீற்றிக்கொள்ளும் இனவாதியே
எல்லா இனமும் தந்த வரிப்பணம், மக்களை வாழவைக்க,
உன்னை வாழ வைப்பதற்கில்லை.

கோடிகள் செலவு செய்து- அதில்
கேடிகள் உலவுவதற்கு பெயர்தான்
புதிய நாடாளுமன்றம்!

***

கவிதை 2: தாழ்ந்தவன்!

கடவுள் என்னிடம் கேட்டார்
என்னை வைத்து சாதி படைத்தார்கள்
அதில் எது தாழ்ந்த சாதி ?

நான் சொன்னேன்
குடியரசுத் தலைவர்!
காரணம் கேட்டார் கடவுள்,

ஆர்.எஸ்.எஸ் தடுக்கிறது அவள் தாழ்ந்த சாதி பெண்,
நாடாளுமன்றத்தை திறக்க
அனுமதியும் இல்லை அழைப்பும் இல்லை
என்றேன்.

கோபம் கொண்ட கடவுள் சொன்னார்,
“கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லை”

பின்பு நீ-யார்?
உன்னால் உருவாக்கப்பட்டவன்.

கவிதைகள் : மணிவண்ணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க