10.06.2023

பத்திரிகை செய்தி

தோழர் லிங்கனுக்கு செவ்வணக்கம்!

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான தோழர் லிங்கன் (வயது 50) நேற்று உயிரிழந்தார்.

நெய்தல் நிலத்தின் பண்பாட்டையும் மீனவ மக்களுடைய பிரச்சினைகளையும் விவாதமாக்க வேண்டும் என்பதில் தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடினார் என்பதே உண்மை . மீனவர் பிரச்சினை, சிங்காரவேலரின் பங்களிப்புகள் ஆகியவை தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக எமது அமைப்புக்கு அளித்து வந்தார்.

மக்கள் அதிகாரம் தோழர்களை சந்திக்கும் போதெல்லாம் தன்னிடமிருந்த பல புத்தகங்களை எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

மக்கள் அதிகாரம் அமைப்புக்கு மட்டுமல்ல; போராடுகின்ற அனைத்து இயக்கங்களுக்கும் உற்ற தோழராக விளங்கினார். மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும் சிங்காரவேலர் தொடர்பாகவும் நூல்களை எழுதியுள்ளார். 1985 சென்னை துப்பாக்கி சூடு, ஒக்கி புயலின் ஐந்தாம் ஆண்டு ஆகியவை தொடர்பாக பேட்டிகள் அளித்து இருக்கிறார்.

மீனவர் மக்களின் போராட்டம் மட்டுமல்ல ; உரிமைக்கான போராட்டம் எங்கே நடந்தாலும் அங்கே வழக்கறிஞர் லிங்கன் இருப்பார். தமிழகத்தின் தென்கோடியிலே கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் என்ற கிராமத்தில் பிறந்து சென்னையிலேயே கால் நூற்றாண்டு காலமாக மக்களின் போராட்டங்களில் பங்கெடுத்த, பங்காற்றிய தோழர் லிங்கனுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக செவ்வணக்கம் செலுத்திக் கொள்கிறோம்!

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர் ,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366421

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க