மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

“விஷசாராய பலிகள்! திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை!” என்ற தலைப்பில் ஜூன் 10 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

“விஷசாராய பலிகள்! திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை!” என்ற தலைப்பில் ஜூன் 10 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். தலைமையுரையில், “கள்ளச்சாராயம் போலீசுக்கு தெரிந்தே தான் நடக்குகிறது. திமுக அரசு 2016-யில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொல்லிவிட்டு 2021-யில் நான் இப்போது சொல்லவில்லையே என்று மாற்றி பேசுகிறது. டாஸ்மாக் மூடும் வரை மக்கள் போராட்டம் தொடரும்” என்று பேசினார்.

அடுத்து பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் சரவணன், “கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை கைது செய்வார்கள், இரண்டு மாதங்கள் கழித்து என்ன நடக்கும் மீண்டும் வெளியே வந்து சாராயம் காய்ச்சுவார்கள். அதிகாரிகளுக்கு இடமாற்றம் என்பதெல்லாம் ஏமாற்று. மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு” என்று பேசினார்.

கண்டன உரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன், “போலீசு இருக்கும் வரை சாராயத்தை ஒழிக்க முடியாது. போதை என்பது மக்களின் சிந்தனையை சீரழிக்கிறது. சமூகத்தில் முறையான வாழ்க்கையை இல்லாமல் சீரழிக்க வைக்கிறது இந்த ஆளும் வர்க்கம். மக்கள் போராட்டமே தீர்வு” என்று பேசினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க