தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள்!

எந்த தேசபக்தியை குத்தகை எடுத்துக்கொண்டு  இத்தனை ஆண்டுகள் தேசவெறியை கிளப்பிவிட்டு விளையாடினீர்களோ அதே தேசபக்தியே தற்போது உங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது!

தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள்!

“இந்தியா” என்ற பெயர்  ஆங்கிலேயர்கள் கொடுத்தது  இந்தியாவை “பாரத்” என அழைப்பதே சரியானது என்று விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளனர் பாசிஸ்டுகள்.

காவிகளின் ஆட்டு மூளைக்கு ஒன்பது ஆண்டுகள் வராத ஞானம் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு “இந்தியா” எனப் பெயரிட்டதும் வந்துவிட்டது போல.

“இந்தியாவை இனி பாரத் என  அழைப்போம்” என்ற  மோகன் பகவத்தின் ஊளையை தொடர்ந்து  ஒட்டுமொத்த சங்கிகூட்டமும் “காலனியாதிக்க மீட்பு” ஊளையிடுகிறது.

தோல்வி பயத்தில் தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள் இது!

பாசிஸ்டுகளே! இதுவரை அரசியல் பேசாதவர்கள் கூட “நீ என்ன பெயர் மாற்றினாலும் நான் இந்தியனே” என்று உங்களுக்கெதிராக வினையாற்றுகின்றனர்.

எந்த தேசபக்தியை குத்தகை எடுத்துக்கொண்டு  இத்தனை ஆண்டுகள் தேசவெறியை கிளப்பிவிட்டு விளையாடினீர்களோ அதே தேசபக்தியே தற்போது உங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது!

புதிய ஜனநாயகம்
06.09.23

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க