ஆசிரியர்களைப் பிச்சைக்காரர்களாக எண்ணும் அரசு… | ஆசிரியர் உமா மகேஷ்வரி

சமூக நீதி காக்கும் பிற அமைப்புகள் எங்கே போயின? தேர்தல் கூட்டணி வைத்த மற்ற தோழமை அரசியல் கட்சிகள் நீதி, நேர்மை, ஜனநாயகம் என அனைத்தையும் சேர்த்து  அடகு வைத்து விட்டனவா?

ஆசிரியர்களைப் பிச்சைக்காரர்களாக எண்ணும் அரசு…

நீதி எங்கே?

அவர்கள் எதுவும் புதிதாகக் கேட்கவில்லை. நீங்கள் பதவி பெறுவதற்கு முன்னர் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைத் தான் கேட்கின்றனர். 2021-இல் பணி நிரந்தரம் செய்கிறோம் என்று நீங்கள் கொடுத்த 181 ஆவது தேர்தல் அறிக்கை வாக்குறிதியைத் தானே கேட்கின்றனர்.

ஊதிய உயர்வு ரூ. 2500 ஐ கேட்கவில்லை. முழு நேரமும் பணி கொடுங்கள், பள்ளிகளில்  மாணவர்களுக்கு  அனைத்து நாட்களும் எங்கள் பணி அவசியம் என்று தானே கேட்கின்றனர்.

நிதி நெருக்கடி இருக்கும் என்றும் முந்தைய அரசு எல்லா பொருளாதாரத்தையும் காலி செய்து விட்டது என்றும்  நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவில்லையா முதல்வர் அவர்களே…

கல்வி அமைச்சரே…. தாங்களாவது பதவி ஏற்றவுடன் ஒரு ஆய்வு செய்திருக்க வேண்டாமா? கல்வித் துறை சார்ந்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நாம் நிறைவேற்ற எத்தனை சதவீதம் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன… உடனடியாக மாற்று ஏற்பாடு என்ன செய்ய வேண்டும் என்று….

ஆசிரியர்களை இப்படி பத்துநாள் போராட்டக் களத்தில் இருக்க வைத்த பாராமுகமாக நடந்து கொண்டு, மனிதாபிமானமற்ற மனிதர்கள் என்று பெயர் எடுத்து விட்டீர்களே….எத்தனை இழுக்கு!

தமிழ்நாடு என்பதற்கு சமூக நீதி காப்பாற்றப்படும் இடம் என்று வாய் நிறைய சொல்லும் நீங்கள் இப்படி நடந்து கொள்வது  தான் சமூகநீதியா?

சமூக நீதி காக்கும் பிற அமைப்புகள் எங்கே போயின? தேர்தல் கூட்டணி வைத்த மற்ற தோழமை அரசியல் கட்சிகள் நீதி, நேர்மை, ஜனநாயகம் என அனைத்தையும் சேர்த்து  அடகு வைத்து விட்டனவா?

அரசுப்பள்ளிகளில் நிரந்தரமற்ற ஆசிரியர்களை நியமிப்பதால் குழந்தைகளின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதை ஏன் எவரும் உணர மறுக்கிறீர்கள்?

இப்படியே போனால் எதிர்காலம்  சூனியமாகும். பொதுச்சமூகமே…. உங்கள் தலைமுறைகள்  வாழ முடியாது, உங்கள் எதிர்காலம் இருண்டு கொண்டுள்ளது.

மீண்டும் தொடர்கின்றனர் ஆசிரியர்கள் தங்கள் அறப்போராட்டத்தை.


முகநூலில் : ஆசிரியர் உமா மகேஷ்வரி

disclaimer



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க