பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்; போரை உடனே நிறுத்து!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போதும் அதன் தொடர்ச்சியாகவே தாக்குதலை தொடுத்துள்ளது. எனவே, குற்றவாளி இஸ்ரேல்தான்.

டந்த சனிக்கிழமை (07.10.2023) இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் குழுவினர் 5000 ராக்கெட்டுகளை ஏவினர். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தரை-கடல்-வான் வழியாக மிருகத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. தெருக்கள் அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளன. காசாவின் முக்கிய வழிப்பாட்டு தளமான அல்-அமீன் முகமது மசூதியை குறிவைத்து தாக்கியுள்ளனர். இதுவரை, 1200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

காசாவில் சுமார் 23 லட்சம் பேர் வாழ்கின்றனர். பாலஸ்தீனியர்களில் 1,23,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர், 74 ஆயிரம் பேர் பள்ளிகளில் தங்கியுள்ளனர் என ஐ.நா கூறியுள்ளது. ஜபாலியா என்ற முகாமில் தங்கியிருந்தவர்கள்  மீது இஸ்ரேல் படை தாக்குதல்  நடத்தியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

படிக்க : ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!

இஸ்ரேல் ஏவுகணை, வெண் பாஸ்பரஸ் விஷப்புகை என பன்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. காசாவுக்கு உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை துண்டித்துள்ளது. காசா எல்லை முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு  “நாம் போரில் இருக்கிறோம், எதிரிகள் இதுவரை கண்டிராத விலையை கொடுப்பார்கள்” என அறிவித்துள்ளார்.

“தங்களது மக்களின் கண்ணியம், சுதந்திரத்தைக் காக்கத் தேவையான அனைத்தையும் செய்ய தயார்” என்று ஹமாஸ் அரசியல் துணை பிரிவு தலைவர் சலே அல்-அரெளரி தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் அழிக்கும் வேலையில் இஸ்ரேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இறங்கியுள்ளன.

1947-இல் ஐ.நா சபை பாலஸ்தீனத்தை அரபு நாடு, யூத நாடு என பிரித்தது. அதன்பின் யூதர்கள் இஸ்ரேல் என்று அறிவித்து கொண்டனர். பாலஸ்தீனத்தை படிப்படியாக ஆக்கிரமித்துக் கொண்டது இஸ்ரேல். அரபுலக நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட நாடே இஸ்ரேல்.

75 ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த மக்கள் மீது தொடர் போரை நடத்தி வந்துள்ளது. அமெரிக்கா ஏகாதிபத்தியம் சரிந்துவரும் சுழலில் அரபு நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பாலஸ்தீன மக்கள் மீது போரை நடத்த கைக்கூர்த்துள்ளது.

இதுநாள்வரை இஸ்ரேல் பாசிச நடவடிக்கையை வெடிக்கைப்பார்த்த இந்திய பிரதமர் மோடி “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பேரதிர்ச்சி அளிக்கிறது” என கூறுவதன் மூலம் பாசிஸ்ட் நெதன்யாகுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, செக் குடியரசு, உக்ரைன், பிரான்ஸ், ஸ்பெயின் இஸ்ரேலின் மிருகத்தனமன தாக்குதலுக்கு ஆதரவாளிப்பதாகவும், ஹமாஸ் நடவடிக்கை  “பயங்கரவாத தாக்குதல்” எனவும்  அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் பைடன் பேசும் போது “இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக நிர்வாக உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார்”. அமெரிக்கா இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்கள், விமானம், ராணூவ வீரர்கள், போர்கப்பல்களையும் அனுப்பியுள்ளது.

கத்தார், ஈரான், சவுதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகள் பாலஸ்தீன மக்களுடன் நிற்பதாக அறிவித்துள்ளன. இந்நாடுகள் அனைத்தும் இந்த ஹமாஸ் தாக்குதலுக்கு காரணமாக இருப்பது இஸ்ரேலின் அடக்குமுறை நடவடிக்கை தான் என கூறியுள்ளன.

படிக்க : சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான சோதனைகளைக் கண்டிப்போம்! – CDRO அறிக்கை

உழைக்கும் மக்கள் யாரும் போரை விரும்புவதில்லை. இதில் பலியாவது மக்களே. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போதும் அதன் தொடர்ச்சியாகவே தாக்குதலை தொடுத்துள்ளது. எனவே, குற்றவாளி இஸ்ரேல்தான்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போர்வெறி தான் இன்று இத்தனை மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுவதற்கு காரணம். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரை உடனே நிறுத்த உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். #பாலஸ்தீன் மக்களின் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டியுள்ளது.

♦ இந்திய அரசே இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதலுக்கு துணைநிற்காதே!

♦ அமெரிக்கா ஏகாதிபத்தியம் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டும் போட்டியில் பாலஸ்தீன மக்கள் பலியிடுவதை அம்பலப்படுத்துவோம்!

♦ அமெரிக்கா போன்ற இஸ்ரேல் ஆதரவு கொடுக்கும் நாடுகளுக்கு எதிராக அந்தந்த நாட்டு மக்கள் குரலெழுப்ப வேண்டும்!

♦ சர்வதேச உழைக்கும் மக்கள் யாவரும் பாலஸ்தீன மக்களுடைய விடுதலை போராட்டத்திற்கு துணைநிற்பதே கடமை!

♦ இஸ்ரேலின் கொலைவெறி போரை உடனே நிறுத்து என முழங்குவோம்!

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
94889 02202.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க