பாலஸ்தீன மக்களுக்கு துணை நிற்போம்! | STAND WITH PALASTINE PEOPLE!

இது நாள் வரை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இல்லாமல் இருந்த இந்திய அரசு, தற்பொழுது இஸ்ரேலுக்கு பகிரங்கமாக தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறது. பாசிச மோடி தலைமையிலான ஆட்சி பாசிஸ்ட் நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வித ஆச்சரியமும் இல்லை.

10.09.2023

பாலஸ்தீன மக்களுக்கு துணை நிற்போம்!

STAND WITH PALASTINE PEOPLE!

மக்கள் அதிகாரம் அறிக்கை

டந்த செப்டம்பர் மாதம் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான அல்-அக்சா மசூதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தவர். 500-க்கும் மேற்பட்டோர் சிறை பிடிக்கப்பட்டனர்.

காசா முனை பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் சார்பில் எதிர்வினையாக சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் அழிக்கும் வேலையில் இஸ்ரேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இறங்கியுள்ளன.

1947-க்கு முன்பு இஸ்ரேல் என்ற ஒரு நாடே கிடையாது. பாலஸ்தீனத்தை படிப்படியாக வந்து ஆக்கிரமித்துக் கொண்டது இஸ்ரேல். அரபுலக நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட நாடே இஸ்ரேல். பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த மக்கள் மீது கடந்த 75 ஆண்டுகளாக தொடர் போரை நடத்தியது இஸ்ரேல். அதன் விளைவாக, பாலஸ்தீன மக்களை ஒரு பகுதிக்குள் அடைத்து கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது இஸ்ரேல்.

படிக்க : பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்; போரை உடனே நிறுத்து!

இஸ்ரேலின் தொடர் போர்த் தாக்குதல்களின் காரணமாக இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்போதெல்லாம் வாய் திறக்காத மேற்குலக நாடுகள் இப்பொழுது இஸ்ரேலை காப்பதற்காக வருகின்றன.

அமெரிக்கா தனது போர்க் கப்பலையும் படைகளையும் இஸ்ரேலுக்கு அனுப்புகிறது. இங்கிலாந்து நாடாளுமன்றம் இஸ்ரேல் தேசிய கொடியின் வண்ணத்தில் மிளிர்கிறது. ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக பாலஸ்தீனம் அழிக்கப்படுவதற்காக காத்திருக்கிறது என்பதே உண்மை.

பாசிஸ்டுகளின் அடக்குமுறைகளும் சர்வாதிகார நடவடிக்கைகளும் துப்பாக்கி குண்டுகளும் பாஸ்பரஸ் துகள்களும் ஒருபோதும் அடக்கி விடாது என்பதைத்தான் நீடித்துவரும் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்ற உண்மையாகும்.

இது நாள் வரை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இல்லாமல் இருந்த இந்திய அரசு, தற்பொழுது இஸ்ரேலுக்கு பகிரங்கமாக தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறது. பாசிச மோடி தலைமையிலான ஆட்சி பாசிஸ்ட் நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வித ஆச்சரியமும் இல்லை.

பாசிச மோடி இஸ்ரேலை ஆதரிக்கிறார் என்றால், இந்த நாட்டின் மக்களாகிய நாம் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கு குரல் கொடுப்பதும் தோள் கொடுப்பதும் முதல் தேவை. பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எப்போதும் உடன் இருப்போம் என்பதை மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை,
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க