இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலகளவில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!

காசா மீது கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 26 இரவு முதல் தரைவழித் தாக்குதலையும் தொடங்கி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தீவிரமடைந்திருக்கும் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்தும், இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலைக்கு முற்று முழு ஆதரவளிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் உலக அளவில் மக்களின் எழுச்சிமிகு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அக்டோபர் 27 அன்று அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் (Grand Central Station) இஸ்ரேலை எதிர்த்து அமெரிக்க யூதர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையமே ஸ்தம்பித்ததையடுத்து நியூ யார்க் போலீசு 200-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தது.

அக்டோபர் 28 அன்று இஸ்தான்புல்லில் மக்கள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக பாசிஸ்டான துருக்கி அதிபர் எர்துவான், “இஸ்ரேல் 22 நாட்களாக பகிரங்கமாகப் போர்க்குற்றங்களைச் செய்து வருகிறது. அதற்கு எதிர்வினையாற்றுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் மேற்கத்திய தலைவர்கள் இஸ்ரேலை போர்நிறுத்தத்திற்கு கூட அழைக்காமல் இருக்கிறார்கள்” என்று பாலஸ்தீன கொடிகளை அசைத்த பல இலட்சக் கணக்கான துருக்கி மக்கள் முன்பு உரையாற்றினார்.

அக்டோபர் 28 அன்று லண்டனில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மக்கள் பாலஸ்தீன மக்களை ஆதரித்தும் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரியும் பேரணி சென்றனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க