புத்தாண்டே வருக!
புரட்சியின் நாயகரைத் தருக!

புதியதொரு ஆண்டு மட்டும் பிறக்கப் போவதில்லை

புதியதொரு வாழ்வும்
பிறக்கப் போகிறது

பாசிச அடக்கு முறைகள்
பிறக்கும் இதே ஆண்டில் தான்

விடுதலைக்கான கொடியும் பறக்கப் போகிறது

இதோ இந்த பாராளுமன்றம்தான் நம் உரிமைகளைப் பறிக்கிறது
என்ற முழங்கிய
பகத்சிங்கின் வார்த்தைகள்
காற்றில் கலந்து தொண்ணூற்றைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன

அடக்குமுறைகளும்
கொடுஞ் சட்டங்களும்
ஒரு போதும் விடுதலை உணர்வை சிதைக்க போவதில்லை

இங்கே கோழைகளுக்கும் துரோகிகளுக்கும் கூட இடம் உண்டு
ஆனால் வாழப்போவது வீரர்கள் மட்டும் தான்

கோழைகளும் துரோகிகளும் உருவாகின்ற இந்த காலத்தில் தான்
விடுதலையின் நாயகர்களும் உருவாக போகிறார்கள்

விடுதலையின் நாயகர்கள் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை

தோழனே
நீ மட்டும் ஏன் நம்பிக்கை இழக்கிறாய்?

இருக்கின்ற ஒரு வாழ்வை மக்களுக்காக வாழ்வதைவிட சிறப்பேதும் உண்டோ?

உரத்து முழங்கு!
இது பாசிஸ்டுகளின் மண்ணல்ல
பகத்சிங்குகளின் கட்டபொம்மன்களின்
பூலித்தேவன்களின்
தீரன்களின்
ஒண்டி வீரன்களின் மண்
நமது மண்!

புத்தாண்டே வருக!
புரட்சியின் நாயகரைத் நம்மிலிருந்து தருக!

ஆம்,
கோழைக்கு வாழ்வு கிடையாது!

வீரர்க்கு சாவே கிடையாது!


மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க