தோழர் லெனின் நூற்றாண்டு நினைவு தினம் | தெருமுனைப் பிரச்சாரம் | சென்னை

பாட்டாளி வர்க்க ஆசான், ரஷ்யா சோசலிச புரட்சி நாயகன், தோழர் லெனின் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை சைதாப்பேட்டை கோதமேடு ஹவுசிங் போர்டு பகுதியில் உழைக்கும் மக்கள் மத்தியில் தெருமுனைப் பிரச்சாரம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

”இந்தியாவில் பாசிச கும்பலை வேரடி மண்ணோடு நாம் சாய்க்காவிட்டால், உழைக்கும் மக்களுக்கு விடுதலை இல்லை. அதற்கு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவமான மார்க்சிய-லெனினிய தத்துவத்தை உயர்த்தி பிடிப்போம், போல்ஷ்விக்மயமான கட்சியை கட்டி அமைப்போம், தோழர் லெனின் வழியில் புரட்சியை நடத்தி முடிப்போம்!” என்று முழங்கியவாறு தோழர்களின் உரையுடன் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.


தகவல்:
பு.மா.இ.மு,
தமிழ்நாடு.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க