டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்

அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவைகள் கலைக்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும்.

21.03.2024

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

ன்றைய தினம்(21.03.24) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனைத் தொடர்ந்து பாசிச பா.ஜ.க. அரசால் கைது செய்யப்படும் இரண்டாவது முதலமைச்சர் கெஜ்ரிவால்.

நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அதன்மூலம் வெற்றி பெறுவது என்ற பாசிச பா.ஜ.க-வின் நிகழ்ச்சி நிரல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைத்து விதமான தில்லுமுல்லுகளையும் முறைகேடுகளையும் செய்வதற்கு பாசிச பா.ஜ.க. தயாராகிவிட்டது என்பதையே இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகிய மூன்று ஏவல் துறைகளையும் ஏவி தனக்கு வேண்டாத கட்சிகளை பிளவுபடுத்துவதும் கட்சித் தலைவர்களை கைது செய்வதும் ஆட்சிகளை சீர்குலைக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவைகள் கலைக்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும்.

நாட்டின் அனைத்து துறைகளும் பாசிசமயமாகிவரும் இச்சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது. மக்கள் போராட்டங்கள் மட்டுமே பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான தடுப்பரண்களாக அமையும்..

பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்த வேண்டுமென்றாலும் கூட அதற்கு மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க