பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம்
| தெருமுனை பிரச்சாரம் | சென்னை
23.03.2024,
சைதாப்பேட்டை,
சென்னை.
இணைப்பு 1
இணைப்பு 2
***
பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம்
| ஆலை வாயில் கூட்டம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பு சங்கமான டி . ஐ. மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக மார்ச் 23 , ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான தோழர்.பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தோழர்களின் நினைவு நாள் ஆலை வாயில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் மு. சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை நாம் ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும். இளம் வயதில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், உழைப்பு சுரண்டலுக்கு எதிராகவும் தன்னுடைய உயிரை துட்சமென கருதி இந்த சமூகம் விடுதலை பெற வேண்டுமானால் அதற்கு மாற்று சோசலிசமே என்று போராடி தூக்கு மேடை ஏறினார்.
நாம் அந்த தியாகத்தை உயர்த்தி படிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் க.செல்வன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் முழக்கம் இடப்பட்டது. கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்
டி . ஐ. மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்
இணைப்பு:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
தமிழ்நாடு.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube